*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, March 19, 2008

வானொலிக் காதலன்...


யார் நீ எங்கிருந்தாய்
ஏன்...எப்படி
எனக்குள் இத்தனை
ஆழமாக.....
மேகம் மறைத்ததோ
முகில்கள் மூடியதோ
இன்று....
முன் வந்து
மழையாய் பொழிகிறாயே!!!
மகிழ்ச்சி மழையில்
நனைந்து
கொண்டிருக்கிறேன்.
பாடல் ஒன்று கேட்டேன்...
பாடல் ஆகினாய் நீயே.
காற்றின்
அலைவரிசைதானே
உன்னை எனக்கு
அடையாளம்
காட்டியது.
இன்று
எனக்கே அடையாளம்
தந்து
அடைக்கலமும்
தந்துவிட்டாய்.
அன்புக்காய்
என் நன்றி
உனக்கா....
இறைவனுக்கா!!!!!

ஹேமா(சுவிஸ்)05.09.2007

1 comment:

விச்சு said...

காற்றின் அலைவரிசையில் ஒரு காதலனா? இவந்தான் அந்த அறிவிப்பாளனா?

Post a Comment