*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, June 05, 2008

நான் யார்???

எங்கே...எங்கே
??நான்...யார்??
தேடிக்கொண்டே இருக்கிறேன்
பல காலமாக.
முயன்று முயன்று
முண்டியடித்தும்
முடிவு தோல்விதான்.
பயமும் பலயீனமும் தான்
என்னை வழி நடத்தும்
பைத்தியங்களாய்.
தலையாட்டுவது மட்டுமே நானாய்.
நான் நானாய் இல்லை.
மந்திரவாதியின் கைகளுக்குள்
இசைவாய் பிசைந்தெடுக்கும்
களி மண்ணாய்.
எனதென்ற சிந்தனை இல்லை...
நம்பிக்கை துணிவு இல்லை...
வாழ்வே ஆனந்தம் இல்லாமல்.
வாழ்வு நரை கண்டு
செல்லரித்த பின் தான்
புது அறிவோடு.
கண் கெட்ட பின்னர் தான்
சூரிய நமஸ்காரமாம்.
பிடித்திருக்கும்
பேய்களைத் தொலைத்துவிட்டால்
நான் நானாய் இருப்பேன்
எனக்குள் முழுமையாக.
இப்பொழுதே எனக்குள்
நான்...
நான் மட்டுமே.
சுற்றி நிற்கும் சத்துருக்கள்
இன்றோடு செத்துத் தொலைய
இன்றிலிருந்து பேய் விரட்டல்.
வேப்பிலை தேடுகிறேன்
நானே!!!

ஹேமா(சுவிஸ்)

No comments:

Post a Comment