*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, January 28, 2008

பொங்கலோ பொங்கல்

உள்ளம் ஓ...வென்றே பொங்க
கண்கள் குமுறிப் பொங்க
எண்ணத்துள் கோலம் பொங்க
மண்பானை பொங்க
நினைவுகள் அரிசியாய் வெல்லமாய் பொங்க
கோபமே நெருப்பாய் பொங்க
பொங்கிய காலங்கள் ஏங்கிப் பொங்க
தஞ்சமாய்த் தமிழன் தரணியெங்கும் பொங்க
அகதி நிலை அகற்றவே பொங்க
மதபேதம் மறந்தே பொங்க
ஜனவரி (தை 1)14 ல் உலகத் தமிழர்தினம் பொங்க
ஒன்றே கூடி நாம் ஒரே நாளில் பொங்க
இயற்கையை மறவாமல் ஏற்றிப் பொங்க
பனிமலை நாட்டில் கருமுகிலே விடியலாய்ப் பொங்க
பகலவன் மறைவாய் மின் அடுப்பில் பொங்க

வேண்டுதல் வேண்டிக் கைகளும் பொங்க
பொங்கலோ பொங்கல் ஓசை பொங்க
கதிரவன் தேடிக் கண்களும் பொங்க
சூரியன் வருவான் நம்பிக்கை பொங்க
தமிழீழம் நோக்கிப் பாலும் பொங்க
பெற்றவர் உறவோடு மீண்டும் கூடிப் பொங்க
காத்திருக்கும் அகதித் தமிழர் பொங்க
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்!!!!

ஹேமா(சுவிஸ்14.01.2008

1 comment:

விச்சு said...

பொங்கல் தினத்தை வைத்து இவ்வளவு எழுதமுடியுமா! ஆச்சரியம்தான்.

Post a Comment