*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, May 27, 2008

வீட்டு நடப்பு...

கொள்ளை ஆசைதான்
கோகிலா போலக் கொண்டை போட...
முடியமா???
மயில் ஆடுகிறதே என்று
வான் கோழியும் ஆட.
மழையும் வர தோகை விரிக்க.
வீட்டு நடப்பொன்று ஆர்ப்பாட்டமாக...
கவிதை போல.

கணவன் தரும் வருமானம் அளவாய்
அழகாய் இரண்டு குஞ்சுகள்.
எப்படித்தான் பட்ஜெட் போட்டாலும்
மாத முடிவில் போதாமல் போகும்.
இருப்பதை விட்டு விட்டு
பறப்பதைப் பார்த்து அண்ணாந்து ஆசைப்பட்டால்...
மாதக்கடைசியில் குடும்பம் கடனில் முட்டும்.
வட்டி வயிறு முட்டிக் குட்டியும் போடும்.
வீட்டில் எல்லாம் இருந்தும்
இல்லை...இல்லை...இல்லைதான்.
வீடு விடியுமா...வசிக்குமா வசந்தம்.
கட்டின புடவை திரும்பவும் கட்டக் கூடாதாம்.
ஆரும் பார்த்தா சிரிப்பினமாம்.
இரண்டு நாளுக்கு ஒரு முறை
நகைகள் மாத்தாவிட்டால் நகைப்பினமாம்.

ஆயிரம் சுவிஸ் காசு வட்டிக்கு வாங்கி
வாடகைக்குக் காரும் எடுத்துக்கொண்டு,
கோடைகால விடுமுறை கொண்டாடா விட்டால்
கூட்டத்தில் பெண்களோடு கலந்திருந்து
கதைபேச முடியாதாம்.
கணவனோ வெளியே கடன்காரனுக்கு வெட்கி,
தொலைபேசித் தொடர்பை வெட்டி
முகத்தில் முக்காடு போட்டபடி.
பாவம் அவன்...என்னதான் செய்வான்!!!
வீட்டுக்குள் வந்தாலோ...
புறுபுறுப்பும் கறகறப்பும்.

"உங்களைக் கட்டி நான் கண்டதுதான் என்ன?
குழந்தைகள் பெற்றதுதானே.
அங்க பாருங்கோ அங்க போகினம்.
இங்க பாருங்கோ என்னென்ன செய்யினம்"
வேலைக்கும் போவதில்லை.
மின்சாரத்தில் மின்னல் சமையல்.
என்றாலும்...
"அப்பப்பா விடிஞ்சா பொழுதுபட்டா
வெட்டி முறியிறன்.
அவிச்சுக் கொட்டியே அடிவயிறு வீங்கிட்டுது"

சொல்லிச் சொல்லியே
ஆண்களை அல்லாட ஆட்டி வைப்பவள்
குடும்பத்தைக் கட்டியாளும் கொண்டவள்தானே!
அவள் நினைத்தால்...
வரவை வைத்து நிறைவைக் கண்டு
கோவிலாக்கலாம் குடும்பத்தை.
போதுமென்ற மனமே பொன்னான வாழ்வு.
இருப்பதை வைத்து
மனம் நிறைத்து வாழ
வளமான நிறைவு...
நெஞ்சுக்கு நின்மதி!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

இல்லாள் என்ற பெயரே எதுவும் இல்லை இல்லை என்று சொல்வதால்தான். கவிதை நல்லாயிருந்துச்சு ஹேமா..

Post a Comment