*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, May 16, 2008

நட்பின் வாழ்த்து...

Glitter Graphics
முகம் காணா என் இனிய
இளைய நண்பனே.....
வெளியில் மழையில்லை
மனதில் அடை மழை.
எல்லாம் நிறைந்திருந்தும்
முற்றிலும் சூன்யமாய்.
நட்பை.....
வெறும் நட்பு
என்பது தவறு.
உண்மை நட்பை
உலகம் உணர்ந்தால்
யுத்தம் இல்லா பூமி
நித்தம் சிரிக்கும்.
வானவில்லாய்
வண்ணம் மாறும்
வாழ்க்கையில்...
எது கண்டு
கை கோர்த்தாய்.
நட்போடு கை கோர்த்து
கூடப்பிறந்தவனாய்
உறவு தருகிறாயே!
முற் பிறப்பில்...
பகிர்ந்து கொண்டாயோ
கருவறையை...
கோர்த்த மலர்
மாலையில்
அருகிருந்தாயோ
மலராய்....நீ!
இப்போதெல்லாம்
பாரதி என்றால்
எட்டயபுரத்து பாரதி
ஞாபகத்தில் இல்லை.
என் நண்பன் பாரதி
நீ மட்டுமே.
உப்பின்றி உணவில்லை...
நட்பின்றி வாழ்வில்லை...
நண்பனே...
வாழ்வோடு கூடி வா.
நானும் கூட வர
வரம் ஒன்று கேட்போம்
இருவருமாய்
இறைவனிடம்.
என்றும் சிரித்திரு.
என் இனிய
நட்பு வாழ்த்துக்கள்!!!

நட்போடு...உன் அக்கா ஹேமா(சுவிஸ்)05.08.2007

No comments:

Post a Comment