*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, June 23, 2008

நம்பமுடியவில்லை...

காற்றுப் பதிந்து
தந்தது...
உன் நஞ்சு கலந்த
நாராசமான
வார்த்தைகளை.
உயிர் இருந்தும்
இறக்க வைத்தாயே
உன் உயிர் கலந்த
உறவு கூட
ஒரு கணம் மயிர்
கூச்செறிந்தது.
உன் நேசத்தை மட்டுமே
சுவாசித்த என் மூச்சும்
மூச்சுத் திணறியது.
உன் உருவம் தேடி
நகர்கிற நொடிகள் கூட
நடுங்கி
நிலை கலங்கிப் போனது.
உன் வரவுக்காகவே
காத்திருக்கும்
கனவுகள் கூட
வெறுத்துக் கறுத்து
இருட்டாகிப் போனது.

உன் குரலின் இனிமைக்காக
காத்திருக்கும்
தொலைபேசி கூட
மெளனமாய்
மொழி இழந்தது.
நினைவுகளில்
உனை நிறுத்தி
கற்பனையில்
உனை வளர்த்துக்
காத்திருக்கும்
என் நினைவுகள் கூட
கதி கலங்கி போனது.

இன்றுவரை
என்னை உன்னோடு
சிந்தனையில்
சேர்த்து வைத்த
என் செவிகள் கூட
பொய்யானதோ
உன் காதல் என்று
பைத்தியமாகிப் பிதற்றியது.
எனை விட
உனை நேசித்த
என் நிழல் கூட
நொருங்கிப் போனது.

நீ......
சொன்ன நச்சு வார்த்தைகள்
நீ.... உனை
மறந்த பொழுதானாலும்
என் வாழ் நாளில்
ஒரு பொழுதும்
மறக்காத
வலி தந்த வடுவை
மாற்ற
இனி ஒரு போதும்
முடியாது உன்னால்!!!!

02.02.2007
ஹேமா(சுவிஸ்)

2 comments:

Shwetha Robert said...

Nice poem:))

\நீ......
சொன்ன நச்சு வார்த்தைகள்
நீ.... உனை
மறந்த பொழுதானாலும்
என் வாழ் நாளில்
ஒரு பொழுதும்
மறக்காத
வலி தந்த வடுவை
மாற்ற
இனி ஒரு போதும்
முடியாது உன்னால்!!!!\

Liked these lines much:-)

விச்சு said...

எனை விட
உனை நேசித்த
என் நிழல் கூட
நொருங்கிப் போனது//

Post a Comment