இன்று ஒக்டோபரின்இறுதி நாள்
மனம் களைத்துப்
பாரமாயிருக்கிறது.
எனக்குள் ஒரு குழந்தையின்
அழுகுரல் உனக்காக...
உன் தாய்மையைத் தேடியபடி.
இப்போ எல்லாம்
நீ மிகத்தூரமாகி...
மிக மிகத் தூரமாகி.
என் மனப்பாரங்களை உனக்குள்
நிறையவே ஏற்றிவிட்டேனோ?
தாங்க முடியாமல்
தூரமாகினாயோ!!!
ஓ......
நீயே பாரமாகிறாய் இப்போ.
ஞாபகப் போர்வைக்குள்
நான் மட்டும் இன்று
உன் கற்பனை மகனைக்
கைப்பிடித்தே
நடமாடிக்கொண்டிருக்கிறேன்.
எங்காவது மனதின்
ஒரு இடுக்கில்
என் காலடித் தடங்கள்
காண்கிறாயா.
கடந்த நாளேடுகளில்
நீ மறந்தவைகளும்
மீட்கின்ற நினைவுகளும் எத்தனையோ.
என் பிறந்த நாளை மறந்தது எப்படி?
உன் அருகாமை கூடக்
கிடைக்காத நான் - கேட்காத நான்
வேறென்ன கேட்டுவிடப் போகிறேன்.
நெஞ்சில் பதிந்து கொள்ளும்படியாய்
உன் நினைவோடு
இதழின் அழுத்த முத்தத்தைத் தவிர.
மன்னிப்போ மறத்தலோ
எமக்குள் வேண்டாம்.
இனியாவது
என்றும் உனக்குள்
மறக்காமல் இருக்க
உன்னிடம்
வரம் ஒன்று வேண்டியபடி!!!!
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||




1 comment:
நல்ல வரம்.
Post a Comment