*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, February 04, 2008

விரைவில் அமைதி...


தேவைப்பட்ட அமைதி
தெருவில் இல்லை...
எனக்குள்ளும் இல்லை...
மனதில் தேடிப்
பொய்களைப் பேசினேன்
மகிழ்ச்சி தந்தது
மயக்கத் தூறலாய்.

என் ஊரில்,
இரவில் சூரியன்
பகலில் நிலவு.
சிவன் கோவில்
மூலஸ்தானத்தில்
சிலுவை தெய்வம்.

தாயே தேவையில்லை
மண்ணைப் பிளந்தே
முளைத்தவன் மனிதன்.

மூக்கால் சாப்பிட்டு
பேசி
சுவாசிக்கிறான் வாயால்.

விலங்கிற்கு
இரண்டு கால்கள்
மனிதனுக்கு
நான்கு கால்கள்
பெண்களுக்கு மீசை
ஆண்களுக்கு மார்பகம்.

கோழி குட்டி போட
கழுதையும் முட்டை
போட...
மனிதனைப் போல
மரங்களும் பேசுகிறது.

பூச்சியும் புழுக்களும்
புன்னகையோடு
பாட்டும் பாட...
பறவையின் முதுகில்
மனிதனின் பயணம்.
வாகனங்கள்
தண்ணீரில் இயங்க..
தண்ணீருக்குள்
மனிதனின் வாழ்வு.

விரைவில்
அமைதி...அமைதியென்று
ஏன் வார்த்தைகளை
வீணடிக்கிறாய்.
இப்போ...வாழும்
இன்றைய அமைதி
பேச்சில் மட்டும்
பொய்யாய்.

யாரும் காணா
அமைதி காண்போம்.
எப்போ....

அப்போ
நீயும்... நானும்
மயானத்திலும்
மையவாடியிலும்
கல்லறை
மண்ணுக்குள்ளும்!!!!!!

ஹேமா(சுவிஸ்) 04.10.2007

1 comment:

விச்சு said...

கற்பனை சிறகடித்து உங்கள் கவிதை வரிகளில்.

Post a Comment