*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, April 24, 2008

இன்னும் புரியவில்லை...

எம் கலாச்சாரம் தாண்டி...
ஐரோப்பியக் கலாச்சாரம்
புதுமையாய் இருக்க...
பிரித்துப் பார்க்க
தப்புக்கள் சில இருந்தாலும்
சரிகள் நிறையவே நிறைவாய்.
நண்பன் ஒருவனிடம் கலந்து அலசினேன்.

மனதளவில் மட்டுமே பாசம்...
மனதை அழுத்தும் வரை அல்ல.
பிறந்த பச்சைக் குழந்தை
தனியறையில் இரவு விளக்கின் துணையோடு.
சிநேகிதனோடு சுற்றுலா வழியனுப்பும் கணவன்.
பிடிக்காத மண உறவை பேசித் தீர்க்கும்....
இல்லை...அமைதியாய் பிரிந்துவிடும் அழகு.

வயது பதினாறில்
துணையோடு பழகாவிட்டால்
உடம்பில் குறையென
வைத்தியரைத் தேடும் சந்தேகம்.
பதுனெட்டு வயதை எட்டிவிட
பழகும் புதுத் துணையோடு
பெற்றவரை விட்டு எட்டிப் போகும் பண்பு.
இந்த வயதிலேயே
தன் காலில் ஊன்றி வாழும் உறுதி.

வீட்டிலோ காப்பகத்திலோ
பிறந்த நாளுக்கொரு தரமும்
அன்னையர் தினத்தில் ஒரு தரமும்
திகதி குறித்தே...
பெற்றவரைச் சந்திக்கும் புதுமை.

முகம் அறியாதவர்கள் கூட
வணக்கம் சொல்லும் முறை.
முதலாளி தொழிலாளி பேதமற்ற சிநேகித உறவு.
எந்தச் சமயத்திலும் சுகம் விசாரிக்கும் அருமை.
அவர்கள் வீட்டுக்கே வேலைக்குப் போனாலும்
எம்மை உபசரித்து அனுசரிக்கும் தன்மை.
இன்னும் இன்னும் ....

அமைதியாய்க் கண்கள் விரியக்
கேட்டுக்கொண்டேயிருந்த நண்பன்
ம்ம்ம்ம்...
நக்க வந்த நாட்டுக்கே
நக்கலா????????
ஊரில் வாழ்கையில்
வரைபடத்தில் கூடக் கண்டதில்லை
ஐரோப்பாவை
என்றானே பாருங்களேன்
அதிரடி பதிலடியாய்
அதிர்ந்தே போனேன்.

தஞ்சம் தந்த நாட்டின் நடப்பை
புதுமையோடே அதிசயித்துப் பேசியது
நக்கலா...நளினமா??????????
இன்னும் புரியவில்லை!
கேட்டவனும்...
எம் பச்சைத் தமிழன் தான்!!!!

ஹேமா (சுவிஸ்)

1 comment:

விச்சு said...

அயல்நாட்டு கலாச்சாரம் புதுமைதான். நான் இன்னும் தமிழ்நாட்டினை தாண்டியது இல்லை. எனக்கு அயல்நாடு எது என்று கேட்டால் என் பக்கத்து ஊரைத்தான் சொல்வேன்.

Post a Comment