*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****
Showing posts with label தமிழ்மண விருது. Show all posts
Showing posts with label தமிழ்மண விருது. Show all posts

Sunday, January 17, 2010

தமிழ்மண விருது 2009.

மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்.தமிழ்மணத்திற்கும் என்னை ஊக்கப்படுத்திய அத்தனை முகம் தெரியா உறவுகளுக்கும் காற்றில் கை குலுக்கிய என் நன்றி.

தமிழ்மண ஈழம் பிரிவில் இந்தக் கவிதைக்கான விருது.

கூட்டாஞ்சோறு உறவு கவிதை என் வாழ்வின் ஆன்மாவின் ஒரு பகுதி.இதில் சொல்லப்பட்ட அத்தனை விஷயங்களும் என்னோடு ஒன்றியவை.என் தாத்தா அம்மம்மாவீடு,அம்மம்மா காய்ச்சிய கூழ்,மாட்டுத்தொழுவம்,பெரிய 3 மாமரம்,அதன் கீழிருந்து பிலாவிலை மடித்து கை நீட்டிச் சண்டை போட்டுக் குடித்த கூழ் என்று...அத்தனையுமே என் இளமைக்காலம்.மறக்கமுடியா இந்த வார்த்தைகள் கோர்த்த கவிதைக்குக் கிடைத்த இந்த விருது என் வாழ்நாள் சந்தோஷம்.

மீண்டும் என்னை உற்சாகப்படுத்தி என்னோடு கை கோர்த்துக்கொண்ட என் உறவுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

ஹேமா(சுவிஸ்)