*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, March 19, 2008

இனிமேல் இல்லை...


தொலைத்தலும் இழத்தலும்
என் வாழ்வின் வழமையாய்...
எல்லாம் இருந்தும்
எதுவுமே இல்லாதவளாய்...
வெறுமையாய்
என்னையே வெறுத்து
நின்ற வேளை
ஒளி தந்து
விழிதந்தவனாய் ஒருவன்.
இருளுக்குத்
தத்துவம் சொல்லி
வெளிச்சத்தை
அறிமுகம் செய்தவன் அவன்.
அதனாலேயே
என் பயணம்
இன்னும் தொடர்கிறது
அவன் பின்னால்.
ஊசி இலைக் காடுகளிடையே
திசை தெரியாமல்
நடத்தலும்
ஓடலுமாயிருந்த நேரம்
என்றோ வாங்கிய
கடனுக்காய்
வழி மறித்தவனாய்
அவன் கைகளுக்குள்
சிக்கவைத்தான்.
தலை நிமிர்ந்து
பேசவைத்தான்.
வாழலாம் வா...
உலகம்
உனக்காகவும் விரிந்து
உன்னையும் வரவேற்கிறது
என்றான்.
சுட்டு விரலால்
என் விரல் தொட்டு
தைரியம் தந்தான்.
ஓரக் கண்ணின்
கசிவைத் தவிர
மெளனித்தவளாய் நான்
இன்று.....
ஓவியமாய்...
சித்திரமாய்...
அழகாய் பதிய வைத்துப்
பூஜித்தபடி நான் இப்போ.
மயக்கத்தில் கூட
கால்கள்
அவனை நோக்கியே.
இனிமேல்
தொலைத்தலும் இழத்தலும்
என்பது அவன்.......
அவன்
மட்டுமாகத்தான் இருப்பான்
முதலும் முடிவுமாக!!!!

ஹேமா(சுவிஸ்)29.10.2007

1 comment:

விச்சு said...

இனிமேல்
தொலைத்தலும் இழத்தலும்
என்பது அவன்.......
அவன்
மட்டுமாகத்தான் இருப்பான்
முதலும் முடிவுமாக!!!!

Post a Comment