
நேசம் நிறைந்தபடி.
முகங்கள் மறைந்திருந்தும்
மனங்கள் நிறைந்தபடி.
யார் நீ...
பழைய உறவோ
பறந்து வந்து
பாசமாய் ஒட்டிக்கொண்டாயே.
மூடிய சிப்பிக்குள்
மண்ணா... முத்தா!!!
வெளியில் முகமும்
உள்ளுக்குள் மனமுமாய்
படைப்பின் இரகசியம்.
உடைக்க முடியவில்ல
மனதின் திரைகளை.
கலங்கிய பொழுதெல்லாம்
காற்றில் கை கோர்த்து
என் கண்ணீர்
துடைக்கின்றாய்.
கூடப் பிறந்தவனாய்
என் பாரம் சுமக்கின்றாய்.
பகிர்ந்து கொள்கிறாயே
எதிபார்ப்புக்கள்
எதுவும் இல்லாமல்.
பேசும் போதெல்லாம்
மனம் இலேசாகி
இறகாகிறதே நண்பனே.
வலி குறைந்து
கலவரம் நீங்கி
வாழலாம் போலிருக்கிறதே.
எப்போதும் நினத்துக்கொள்.
தூரம் தொல்லைதான்.
மனங்கள் தொலைவிலில்லை.
உண்மை அன்பு எம்
உள்ளங் கைகளுக்குள்.
தோழனாய்
நீ...
தோழியாய்
சோதரியாய்
நான்...
வாழ்வோம்
வா என்றும்!!!!
ஹேமா(சுவிஸ்)21.06.2007
Tweet | ||||
4 comments:
அருமையான தோழன் போலும்.
GREAT ONE
Post a Comment