*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 27, 2008

எங்கோ இருந்து கொண்டு...

என்னதான் செய்கிறாய்
எங்கோ இருந்து கொண்டு...
மொழி தெரியாக் குழந்தை போல
ஒரே குழப்பம்.
உன் உணர்வின்
பார்வை மட்டும்
பட்டுத் தெறிக்கிறது.
என்றோ விட்டுப் போன
உறவொன்று
சட்டென்று
கை சேர்ந்தாற் போல
சொட்டுக் கண்ணீரில்
மனம் கரைந்து போகிறது.

கரைந்து கொண்டே
இருக்கிறது நேரம்.
கணங்கள் தேடும்
தவிப்பின் படபடப்பு.
மீண்டு விடுபட
நினைத்துத்
தோற்றுப் போகிறேன்.

நட்பின் கனத்த இதயம்
முகம் காணாமலேயே
முட்டி மோதுகிறது.
அங்கொன்றும்
இங்கொன்றும்
புள்ளிகள் போட்டதும்
தொட்டுப் போகும்
கோடுகள்...
கோலங்கள்
அழகழகாய்....
அன்பும்
தூர இருந்தாலும்
தொட்டுச் செல்கிறது
மனதை மிக அழகாய்!!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

நட்பின் கனத்த இதயம்
முகம் காணாமலேயே
முட்டி மோதுகிறது.// நட்பிற்கு முகம் தேவையில்லை.

Post a Comment