*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, March 21, 2008

விதி....


வெறி கொண்டு....
வேட்டை ஆடுகிறான்
அரக்கன்.
விதி கொண்டு
வழி செய்வோம்.
எம் மண்ணை
நாமே மீட்போம்.
தமிழ்...
இன அழிப்பு
நித்தமும்.
இடம் விட்டு...
இடம் விட்டு...
இனி
இடம் பெயர
இடம் இல்லை
எமக்கு.
பொறுமை...
பொறுமை...
எருமை மாட்டில்
மழை பெய்த
கதைதான் அது.
தலைமுறை
தலைமுறையாய்
அடிமை வாழ்வு.
எழுவோம்
நாம்
இத்தலைமுறை.
அடிமை விலங்கை
விலக்கி
எழுவோம்.
போதுமடா சாமி
பிச்சை போட்டது.
பருக்கைகள் தூவி
பட்டினி ரசிக்கிறாய்.
போர்..போர்..போர்
கூப்பாடு போடுகிறாய்.
யார்தான் மாற்றுவது
உன் தலை விதியை.
யாமறியோம்
பராபரமே!!!

ஹேமா(சுவிஸ்) 19.03.2007

1 comment:

விச்சு said...

இனி
இடம் பெயர
இடம் இல்லை
எமக்கு.// விரட்டப்பட்டவர்களின் நிலைமையில் புரியமுடிகிறது.

Post a Comment