*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 27, 2008

வாழ்வுக் கோலம்


தொலைந்த இடத்திலேயே
நின்று கொண்டிருக்கிறேன்.
நிலை தடுமாற வைக்கிறாய்.
வயதும் வாழ்வும்
வளர்ந்ததே தவிர,
மனமும் தவிப்பும்
அடம் பிடித்தபடி
அதே இடத்தில்
சின்னக் குழந்தையாய்.
சிரிக்கத்தான் வந்தேன்
கொஞ்சம்
மனம் விட்டு...


மனதையே
பறித்துக் கொண்டாய்.
விட்டு விட்டேன்
மனதை உன்னிடம்.
சொன்னது குறைவாய்
சொல்லாதது
நிறையவாய்...
சின்னவன்
உன்னிடம் மறைவாய்.

ஏக்கமும் தவிப்பும்
ஆசையும் அன்பும்
என்னக்குள்ளேயே
அடங்கி
எரிகின்ற நெருப்பாய்
அணையாமல்
என்றும்.
சொல்ல முடிந்ததும்
சொல்ல முடியாததுமாய்
மெல்ல அமிழ்கின்ற
வார்த்தைகள்.

கனவுகள்தான்
கை கோர்க்கின்றதே
தவிர
நினைவுகள்
நெடுந்தூரமாகி...
நக்கலும்
நையாண்டியுமாய்
முடியவில்லை.
சமூகமும் சொந்தமும்
சாக்கடைச் சகதிகள்.
சொல்வதற்கு
அவர்கள் என்றால்
சாவதற்கு
நான் மட்டும்தானா!!!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

வயதும் வாழ்வும்
வளர்ந்ததே தவிர,
மனமும் தவிப்பும்
அடம் பிடித்தபடி
அதே இடத்தில்
சின்னக் குழந்தையாய்.

Post a Comment