*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, June 12, 2008

இல்லை... இல்லை...

நீயும் நானும் நிலைப்பதும் இல்லை
நிலைக்கும் எதுவும் சொந்தமும் இல்லை
பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை
பிரம்மனின் படைப்பில் பேதங்கள் இல்லை
மண்ணின் நிகழ்வுகள் மரணத்தில் இல்லை
மனங்களின் நிகழ்வுகள் மரணிப்பது இல்லை
கவலைகள் எதுவும் தொடர்வதும் இல்லை
சந்தோஷங்கள் எதுவும் நிலைப்பதும் இல்லை
கோபத்தைக் குறைத்தால் கெடுதிகள் இல்லை
நமது எதிரி நோயைப்போல் இல்லை

உண்டு என்ற ஒன்று உன்னிடம் இல்லை
இல்லை என்பது என்றுமே இல்லை
ஊருடன் பகைத்தால் வாழ்வதற்கு இல்லை
பையில் வெறுமை பந்தங்கள் இல்லை
காண்பவை எல்லாம் உண்மையும் இல்லை
வீணையின் நாதம் விரல்களில் இல்லை
வதந்தியின் வேகம் வாகனத்திற்கு இல்லை
காதலின் ஆவல் கல்யாணத்தில் இல்லை
(நேர்)கோடுகள் இரண்டு இணைவதும் இல்லை
பிறப்பின் ஆனந்தம் இறப்பில் இல்லை
பேதங்கள் பார்த்தால் ஒற்றுமை இல்லை

அந்தியின் மயக்கம் விடியலில் இல்லை
அம்மாவின் அன்பு எங்குமே இல்லை
நினைப்பது எல்லாம் நடப்பதும் இல்லை
கனவின் நின்மதி நினைவில் இல்லை
கானல் உறவு கண்டபின் இல்லை
நாக்கின் நடுவில் சத்தியம் இல்லை
நட்பின் நிகர் வீட்டுக்குள் இல்லை
உறுதி மொழிகள் ஊர் சென்றதும் இல்லை
உத்தம மனிதர் நம்மிடை இல்லை !!!!

ஹேமா(சுவிஸ்
)

No comments:

Post a Comment