*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, March 28, 2008

உயிர்வலி...

love
காலமும் நேரமும்
ஒத்து வராத
தேசம் உனது
வந்தாய்.... சென்றாய்
என் கண்
பார்த்துக் கொண்டிருக்க
உன்னையும் என்னையும்
பிரித்துப்...பிய்த்துக்
கொண்டு போனது
புகையிரதம்ஒரு நொடி கலங்கிப்
பின் சுதாகரித்தேன்.

நீ பிரியும்போது
சுவாசம் பட்ட வேதனை...
நீ பிரிந்தபோது
உயிர் வலித்த வலி...
உன் பார்வை
தந்த தாய்ப்பாசம்...
நம் கைகள்
விட்டு விலகினபோது
கலங்கிய நம் கண்கள்...
உணர்ந்தாயா
உனக்குள்ளும் நீ.

உன் ஞாபகமாய்
நீ விட்டுப்போனவைகள்
என்னிடம் நிறையவே
எதைக் கொண்டு போனாய்
என்னிடமிருந்து நீ.

கதவின் கண்ணாடியில்
நீ பதித்த
கை ரேகைகள்...
நீ துடைத்த
துவாயின் வாசம்
என் சுவாசம் வரை...
புகை பிடித்த
அடையாளங்கள்
பல்கனியில்...
வியர்வை மணத்தோடு
பாவித்த துணிகள்...
குளியலறையில்
படித்துப் போட்ட
குப்பையாய் புத்தகங்கள்...
படுத்துக் கசங்கிய
போர்வை...
இன்னும்... இன்னும்
எச்சங்களாய் என்னோடு.

ம்ம்ம்ம்ம்........
தனிமை எனக்குப்
பழகிய ஒன்றுதான்.
என்றாலும்
முடியவில்லை
குளிருக்கும்
தனிமைக்கும்
மட்டும்தான் துணை
என்று நினைத்த
தலையணை
இப்போ....
கட்டி அழவும்
கட்டி அணைக்கவும்
உன் நினைவோடு
என் அணைப்புக்குள்!!!!

ஹேமா(சுவிஸ்)25.10.2007

1 comment:

விச்சு said...

குளிருக்கும்
தனிமைக்கும்
மட்டும்தான் துணை
என்று நினைத்த
தலையணை
இப்போ....
கட்டி அழவும்
கட்டி அணைக்கவும்
உன் நினைவோடு
என் அணைப்புக்குள்!!!!// உடன் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவோ மறுக்கவோ இயலாதுதான்.

Post a Comment