*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, March 04, 2008

உன் நினைவு


மன்னித்துக்கொள்...
இனியாவது
என் பொழுதுகள்
கொஞ்சம்
உனக்கானதாய்.
தாயின் கருப்பையில்
உயிர் உரசும்
குழந்தையாய்
உன் நினைவு...
மறக்கவே முடியாததாய்.
மன உளைச்சலும்
உடல் உளைச்சலும்
சேர்ந்தே உன்
நினைவையும்
நேரத்தையும்
விழுங்கிக்கொள்கிறது.
மன்னித்துக்கொள் மீண்டும்.
நீ வருகிறாய் என்பது
என்...
எத்தனை வருட
வேண்டுதல்.
அறிவாயா நீ.
பனிக்காலங்களில்
காணும்
பகலவனைப்போல.
சந்தோச வெப்பத்தோடு.
என் இறக்கைகள்
அறுக்கப்பட்ட நிலையில்
உன் இறக்கைகளின்
துணையோடுதானே
இன்று.
என் ஜீவனை
புதுப்பிக்கும் சக்தி
உன்னிடம் மட்டும்தானே.
புரிந்து கொள்
என் அன்பே
நான் உன் அன்பான
ராட்சதக் காதலிதான்.
உனக்குள்ளும்
ஆவல் இருக்கிறது
என் அன்புக்கும்
கொஞ்சலுக்குமாய்.
மனிதம் மறந்த
இயந்திர வாழ்வில்
உன்னோடு கழிக்கும்
அந்த மணிப்பொழுதுகளே
என் நின்மதிக் கணங்களாய்.
என்றாலும்....
சிலசமயங்களில்
அவ்வப்போது
உன் நினைவைத்
தொலத்துவிட்டு
புலம்புவது
என் அன்றாட
வழக்கமாகி
விடுகிறது!!!!!!

ஹேமா(சுவிஸ்)25.09.2007

2 comments:

- இரவீ - said...

//நான் உன் அன்பான
ராட்சதக் காதலிதான்.//

நீங்க ஆரம்பத்தில் இருந்தே அப்படி தானா... சரி சரி.

விச்சு said...

பனிக்காலங்களில்
காணும்
பகலவனைப்போல.
சந்தோச வெப்பத்தோடு.//
நிஜமான கற்பனைகள்.

Post a Comment