*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, April 06, 2008

வருவாயா...

Glitter Graphics
என் இதமான
பருவத் தோழன் நீ.
நீ... இல்லாத சமயங்களில்
நானே இல்லாமல் போகிறேன்.
வெயில்கால நிழலாக,
குளிர்காலக் கம்பளியாக,
மழை நேரக் குடையாக,
பசி நேர உணவாக,
இருளில் ஒளியாக,
துன்பத்தில் தலை தடவும்
தோழியாக,
வாழ்வில் வழி நடத்தும்
ஆசிரியராக,
நோய் நேரத் தாதியாக,
தாயாக... தந்தையாக,
தாரமாக,
மடி தவழும் குழந்தையாக,
தனிமைக்குத் துணையாக,
மரணம் வரை கூடவே
வருவாயா
என்னோடு நீ!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

என்னாச்சு போட்டோவைக்காணோம். எல்லாமுமாக இருப்பவன் அவனா!

Post a Comment