*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, May 22, 2008

வாழ்வின் விளிம்பில்...

தனியாக...
நின்று சாதித்தது
எதுவுமேயில்லை
தொலைந்துதான் போயிருக்கிறேன்.
தொலைத்ததில்...இழந்ததில்
என் குழந்தைகளின்
வாழ்வும் கூட.
பதில் இல்லாத
என் வாழ்வு போல
கேள்விக்குறியோடு?
யாரைக் குறை சொல்ல!
இறைவனையா...
என்னையா...இல்லை....
கால அத்தியாயத்துக்குள்
புதைந்து கொண்டேயிருக்கிறேன்.
அநேகமாக
இனி என்னை
காணப்போவதில்லை
நீ...
கனவுகள் தாண்டிய
விலங்கிற்குள்
நீயே மாட்டிக்கொண்டு விட்டாய்.
தாயே உனக்காய்...
உனக்குள்
உறங்கும் உயிருக்காய்...
இனி வாழ்ந்து கொள்.
நான் உனக்குத்
தேவையில்லை
இனி ஒரு போதும்!!!

22.10.2004
ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

ம்ம்ம்.. நல்லாயிருக்கு ஹேமா

Post a Comment