*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, June 29, 2014

மதம் பிடித்த புத்தம்...

ஆடு கடித்து மாடு கடித்து
புல் பூனை கடித்து
மனிதனைக் கடித்து
மதத்தைக் கடித்து....

பள்ளிவாசல் முனையில்
பாடிக்கொண்டிருந்தான்
தெருப்பாடகன் நமந்த நாயிடம்.

இப்போதெல்லாம்
காடுகளே கொல்கிறது
தொலைவானப் பறவைகளையும்
மான்களையுமென
நாயும்....

சூரியனைக் கடித்து
நிலவைத் தின்ற பிசாசுகளென
அவ்வழி பறந்த
ஆட்காட்டியும் அலறியது.

மதக்கிடங்கில்
பேதமற்றுக் கடித்துக்குதறும்
மஞ்சள் நரிகள்
பயங்கரவாதியென்றது புலிகளை
உலகமும் ஆட்டியது
பெருந்தலைகளை.

வீடற்றுக் கல்வியற்று
கோயில்கள் பள்ளிகள்
பாடசாலைகள்
ஏன் கல்லறைகளைக்கூட
தம் நிலத்தில் ஆகாதென
உடைத்தும் சிதைத்தும்
மரக்கீழ் வாழும்
ஆதிமனிதர்களென
புத்தன் தவிர
அத்தனை பேரும்.

வீடற்ற வலிகளும்
வேலி நுழைந்த கதைகளும்
பசியும் பண்பாடழியும் கோபமும்
தெரியுமெனக்கு.

அடங்கிவிடுமா
வீரமும் விடுதலையும்
வேண்டுதல் தலங்கழித்தால்
அடங்கிப்பூத்த கண்ணீரும்
காய்ந்த குருதியும்
வழிகாட்டும்
நமக்கான இருப்பிடங்களை.

தேடிக்கிடைக்காதது எதுவுமில்ல அமீன்
கிடைக்காமலா போகும் எமக்கானது!!!

ஹேமா(சுவிஸ்

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மனதின் ஆதங்கம் புரிகிறது..என்னதான் செய்முடியும்.

-நனறி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

கிடைக்கும்,கொஞ்சம் தாமதித்தேனும்!

Anninos Christoforou said...

http://anninos45.blogspot.com/
https://www.youtube.com/watch?v=2wAQZ4n6tuc
http://anninos47.blogspot.com/

Post a Comment