*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, June 16, 2014

வாழ்விலக்கணம்...

ஆசைக் கயிற்றில் நடக்கும்
கூத்தனாய் வாணாள்
வானுலகம் காத்திருக்கும்
மிகுதி வாணிபத்துக்காய்.

ஊனமனதை
காலம் விழுங்கிச் சமிக்க
வாஞ்சையில் சுழலும்
அந்தரங்க மெய்.

உச்சக்கட்ட மீட்பில்
உயிர்க்கூட்டில் படிம நாகமாய்
விடமவிழ்க்கும் இறை வெறுத்து.

பட்டாம்பூச்சியின்
இறுதி மூச்சில் தொட்டணைத்தவனும்
முலையிரங்கித் தேடும் தன் குழந்தையும்
நீர்த்தாவரமாய் விழிமிதக்க...

இங்கே...
உறவுகள் தவிக்க
துவங்குகிறது உப்பரிகை ஊர்வலம்.

கண்ணாமூச்சி விளையாட்டை
கொம்பேறி ரசித்துக்களிக்கிறது
மரணம்
காலம் காலமாய்!!!

அன்போடு நம்முள் கலந்து கலைந்த ஆன்மாவுக்கு சாந்தி கொடுத்து நாமும் சாந்தி பெறுவோம் !

ஹேமா(சுவிஸ்)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படமும் அருமை...

Anonymous said...

அருமை அக்கா...............

Post a Comment