*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, May 14, 2014

இறுதிப் பாடல்...

பாடத்தொடங்கியிருந்தது
பறவையொன்று
நீண்டதொரு பாடலை
ரசிக்கும்
இரவின் நடுப்பகுதியிலிருந்து.

ஆலாபனை எது
ஆரோகணம் எதுவென
என்னவன்
இதழ்மொழிய
நானும் இரவும்
தலையசைக்க...

வெள்ளமென
ஒரு இசைநதி
அதன்
விழிவழி வழிந்து
குளிரவைக்க...

நீலக்கடலுக்கும்
கடலில் முங்கியெழும்
தென்னை மரத்திற்குமாய்
முத்திட்டு நாம்
பிரிந்தும் இணைந்துமாய்....

தழுவிய தென்றல்
புயலாய் மாற
பாறத்தொடங்கியது
தென்னை
தின்னத்தொடங்கியது
பறவையைக் கடல் ...

என்னவன்....என்னவன்

பிந்தையநாளில்
எலும்புகள் சோதித்தவர்கள்
குற்றமென்றார்கள்
காற்றையும்
கடலையும்...

பாவிகளே
மீட்டிடுங்கள் எலும்புகளை
பறவையும் அதன் பாட்டும்
அகப்பட்டிருக்கும்...

என்னவனும்!!!

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கவிதையின் ஒவ்வொரு வரிகளும் மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா...சூப்பர்ப்...!

திண்டுக்கல் தனபாலன் said...

பிரமாதம்...

Post a Comment