*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, May 08, 2014

உள்ளங்கைக் காடொன்றில்...


பூண்டுகள் பூத்து
ஆந்தைகள் உறங்கும்
பகல் பொழுதில்
தோட்டாக்கள் தீர்ந்த
துவக்கிலுள்ள தாகத்தின்
உன்மத்தம் ஊடுருவ...

உப்பின் தூவலாய்
சிறுமழைத் தூரலில் மிதக்க
புரவி முதுகில்
சுருண்ட வண்டென
பெருவனம் புகுந்த கடல்...

இயலாத இராணுவமாய்
ஆரம்பிக்கிறாய் மீண்டும்
உன் தோட்டாக்கள்
இல்லாத துவக்கோடும்
உவ்விடத்திலேயே
ஊசி அபகரித்த
கதுப்புப் பழங்களோடும்!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment