*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 02, 2013

கொடுக்க'வா' குட்டிக் குருவி...


வந்து வந்து குந்திக்கொண்டிருக்கிறது
ஒரு குருவி
உண்டு கழித்த
நினைவுகளை மறக்காதோ.

பல்கனியில் தானியத்தை
பரப்பிவிட்டுக் காத்திருப்பேன்
அடிபட்டு
கொஞ்சிக் குலவி
சாப்பிடும் அழகை ரசிக்க
பசி போக்கிப் புசிக்க.

எச்சம் கழுவுவது
ரசனையை விட மோசமது
தமிழில் செல்லத்திட்டு வேறு
 'கக்கா இருந்தால்
சாப்பாடு போடமாட்டேன்
.......போ'.

மெல்ல மெல்ல
குவளைத் தேனீர்
என்னைச் சூடாக்க
இன்னும் பனி மழை
பூமியை வெள்ளைப்பூக்களால்
அலங்கரிக்க
குருவியோ குந்தியிருக்கிறது
பாவமென 

சற்றுத் தள்ளி
பரிதாபமாய்!!!


"கட்டித்தொங்கவிட உருட்டிய உணவு விற்பனையில்.பனிக்காலத்தில் பறவைகளுக்கும் உணவுத் தட்டுப்பாடு."

ஹேமா(சுவிஸ்)

15 comments:

விச்சு said...

நல்லதொரு படைப்பு..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல அழகான ரசனை கவியாய் மிளிர்ந்திருக்கிறது

கொல்லான் said...

அருமையான கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்...

Unknown said...

இன்னும் பனி மழை
பூமியை வெள்ளைப்பூக்களால்
அலங்கரிக்க

அழகிய கற்பனை!

Kanchana Radhakrishnan said...

அருமை

ராமலக்ஷ்மி said...

அருமை ஹேமா!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.. நல்லதெரு கவிதை

இளமதி said...

அருமையோ அருமை! வாழ்த்துக்கள் ஹேமா...:)

குட்டிக்குருவிக்கு தானியத்தை
உருட்டிக் கொடுத்து
ஊட்டும் அழகினை
மெட்டுப்போட்டுப்
பாட்டிசைத்த கவிதனை
கைதட்டி ரசிக்கின்றேன்
கவியே நீர் வாழ்கவே...

பால கணேஷ் said...

உங்களின் ரசனை என்னையும் கை தட்டி ரசிக்க வைக்கிறது ஃப்ரெண்ட்! சூப்பர்ப்!

thiyaa said...

நல்ல ரசனையான கவிதை ஹேமா
உங்கள் மனித நேயம் அதைவிட அழகு.

தனிமரம் said...

ம்ம் காத்து இருக்கும் அந்த நேரங்களும் நல்ல உறவு கிடைக்கும் குருவி போல அருமை கவிதை கவிதாயினி!

இராஜராஜேஸ்வரி said...

இன்னும் பனி மழை
பூமியை வெள்ளைப்பூக்களால்
அலங்கரிக்க
குருவியோ குந்தியிருக்கிற
அழகு மிகவும் ரசிக்கத்தான் வைக்கிறீர்கள் தோழி .!பாராட்டுக்கள்..

அருணா செல்வம் said...

எச்சம் கழுவுவது
ரசனையை விட மோசமது
தமிழில் செல்லத்திட்டு வேறு
'கக்கா இருந்தால்
சாப்பாடு போடமாட்டேன்
.......போ'.

மிச்சத்தைப் போட்டால்
எச்சத்தை “இருக்கும்“ தானே...?

அழகிய கவிதை என் இனிய தோழி ஹேமா.

மாதேவி said...

குட்டிக் குருவியுடனான பாசப் பிணைப்பு அருமையான கவிதையாக.

Post a Comment