*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, July 26, 2008

இனியவன் நீ...


தென்றலாய் தொட்டாய்
புயலாய் தாக்கினாய்.
மறக்க நினைக்கிறேன்
மூச்சுக் காற்றுக்குள்ளும்
சுவாசமாய் நீ....தானே!

தன் உடம்பின்
பாரத்தை விடக்
கூடிய பாரத்தைச்
சுமக்குமாம் எறும்பு.

கையளவு இதயத்துள்
உன்னைச்
சுமக்கிறேனே நான்.

மறக்க நினைக்கும்
போதுதானே தெரிகிறது
உன்னை நான்
நேசிப்பதின் ஆழம்.

உறங்க மனமில்லை
நினைவில் நீ...

உறங்கினால்
விழிக்க மனமில்லை
கனவில் நீ!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

தமிழன்-கறுப்பி... said...

///மறக்க நினக்கும்
போதுதானே தெரிகிறது
உன்னை நான்
நேசிப்பதின் ஆழம்.///

ம்ம்ம்...

தமிழன்-கறுப்பி... said...

\\\
உறங்க மனமில்லை
நினைவில் நீ...
உறங்கினால்
விழிக்க மனமில்லை
கனவில் நீ!!!
///

இருக்கலாம் இருக்கலாம்...

தமிழன்-கறுப்பி... said...

///
உறங்க மனமில்லை
நினைவில் நீ...
உறங்கினால்
விழிக்க மனமில்லை
கனவில் நீ!!!
///

அழகு வரிகள் ஹேமா...

தமிழன்-கறுப்பி... said...

///"இனியவன் நீ..."///

அது சரி யாரது...:)

ஹேமா said...

வணக்கம் தமிழன்.நிறைய நாளுக்குப் பிறகு இந்தப் பக்கம்.என்றாலும் நிறையவே கவனித்துக் கருத்துத் தெரிவித்து இருக்கிறீர்கள்.
நன்றி.அடிக்கடி வாங்கோ...

//அது சரி யாரது...//
சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.இப்போதைக்குச் சொல்லமாட்டேன்!!!

Anonymous said...

Hi kuzhanthainila,

Congrats!

Your story titled 'வானம் வெளித்த பின்னும்.......: இனியவன் நீ...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th July 2008
01:40:55 AM GMT

Regards,
-Tamilish Team

விச்சு said...

மறக்க நினைக்கும்
போதுதானே தெரிகிறது
உன்னை நான்
நேசிப்பதின் ஆழம்.

Post a Comment