*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 17, 2015

மன்மத வருடம்...

கடிக்கும்
தின்னும்
மிருகம்
நீ
நான்.

பழங்குடிகளின்
தென்னங் கள்
வாசனை.

வெடித்துப் பிளந்த
இதழ்கள்
வலிக்க வலிக்க
ஆடிமாத வெயிலில்
தீ மிதிப்பு.

வெள்ளை மயில்
பட்ட மரம்
ஒற்றைத் தாமரை
சாரை அரக்கிய நிலம்.

கொஞ்சம் விட்டு
ஆறியபின் இதழூற்று
காய்ந்த நிலத்தின்
பொருமலிப்போ.

உள்காய்ச்சலில்
துளையிட்ட புண்களில்
மழையீரம் தடவ
மயிலெனத்
தவமிருக்கிறேன்
ஒரு மாதிரியான
அகவலுடன்.

பஞ்சாங்கம்
வந்தபாடில்லை.

உலர்த்தித் தளிர்த்த
உன் உதடுகள்
தேவைப்படலாம்
காயமில்லா இரவுகளில்.

மன்மத வருடமாமே இது!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment