*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, September 30, 2014

சமிக்ஞைகள் மீறிய குற்றம்...

சுவடுகளை
அடையாளப் படுத்திக்கொண்டார்கள்
அவர்கள்.

சிலந்தி வாயில் பூச்சியென
நெருங்கிய
மரண விளிம்பினோரம்
அடர்நீலக் கண்களோடு
அந்நியப் பறவையொன்று
கருக் கலைதல் பற்றி
பேசிக்கொண்டிருக்க...

மின்னிப் பறக்கிறது
சுண்டிய
சிகரெட்டின் துண்டொன்று.

வெள்ளைப் புறாக்கள்
வாழும் கனவுகளோடு
தகட்டுக் குகை முகடுகளில்.

விநாடிக்குள்
கணநேரச் சிலிர்ப்பில்
எல்லாமே ஆகிவிட்டது
யாருமறியாமல்.

வாழ்வு...

புயலடித்தோய்ந்த மணல்
ஆசுவாசப்படுத்தியபடி
அதன் மேலேயே
ஏலாமையோடு படர்வதாயும்...

கருக்கலைந்தவள்
மீண்டும்
முதல்முறை புணர்ச்சிக்கு
ஆயத்தமாவதாயும்!!!

குழந்தைநிலா ஹேமா !

1 comment:

தனிமரம் said...

ஆற்றாமையின் இனவாத ஒடுக்குமுறை என்று பொருள் கொள்ளும் கவிதை!

Post a Comment