*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, January 25, 2014

மயூரத்தவம்....

ப்ரியத்தை....
மயூரமிசைத்து
தூளியாட்டுகிறது
மௌனக் காற்றுவெளி.

புள்ளியாய் அசையும்
தீபத்தில்
நானென்ற திரியும்
நாமென்ற வெளிச்சமும்.

இரவுகளை நீட்டிச்செல்லும்
தூங்கா வானத்தில்
வெளித்த
வெளிச்ச நிலவில்
அவனோடு நான்..

முகமுரசி
கருந்தாடி எழுதும்
மோகத்தீயில்
சிலிர்த்தெழுந்து
சுயம் தொலைக்கவைத்து
அடையாளமிடுகிறாய்
சாதாரண சகமனுஷிதான்
நானுமென.

ஒரு கோப்பை
தேநீர் மயக்கத்தில்
சிறுதூரல் மழையணைப்பென
சரிந்துகிடக்கும்
என் விழிக்கா விழியில்
மேகம் கடக்கும் கருமுகில்
அழகு காட்டிப்போகிறது
என் மீசைக்குழந்தையை.

தன் எச்ச விதையில்
முளைத்த மரத்தில்தான்
சில விதிப்பறவைகளின்
கூடுகள்
விதியென இணையும்
என்னையும் அவனையும்போல!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

இணைவது நம் மனதில் இல்லையோ...?

வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

//நானென்ற திரியும்
நாமென்ற வெளிச்சமும்//

மோகத்தீயில் எரிவதால் வெளிச்சம்? அருமை ஹேமா.

”தளிர் சுரேஷ்” said...

வர்ணனைகள் சிறப்பு! ரசித்தேன்! நன்றி!

சுதா மயூ said...

தங்களின் மயூரத்துவம் பிடித்துள்ளது.........

Post a Comment