*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, July 13, 2013

வாழ்வு (1)


விழுந்தால்
ஏந்திக்கொள்ள இரு கைகள்.
பள்ளம் நிரம்பிய பூக்கள்
ஆற்றில் இழுத்தாலும்
அணைத்துக்கொள்ளப்
பாறைகள்.
கொத்தாமல்
துரத்தும் பாம்பு.
தயார்ப்படுத்தியபிறகே
கனவுகள்கூட
மிரட்டுகின்றன.

அந்த இரக்கம்கூட
சில மனங்களுக்கு
இல்லாமல் போனதேனோ !

சீரான
வார்த்தைக் கோர்வைபோல்
அழகாய்
அடுக்கடுக்காய்
எதிர்பார்த்த வண்ணத்தில்
அமைவதில்லை
வாழ்க்கை !

ஒவ்வொரு நிமிடங்களும்
விட்டுச் செல்கிறது
தேடலின் அதிசயங்களை
முடியாத கனவைத்
தொடர வரும்
அடுத்த இரவுக்கான
காத்திருப்புப்போல!

கடின தருணங்களை
கடந்துகொண்டிருக்கிறேன்
விளக்கம் தேவையில்லை
அவசியமற்றது
தெரிந்தவர்களுக்கு
மிச்சமிருப்பவர்களோ
நம்பமாட்டாதவர்கள் !

ஒற்றைப் புள்ளியில்
குந்தியிருக்கிறேன்
கனகாலம்.
எங்கு சுற்றிலும்
பெரிய முள்ளை
உரசிப்போகும்
சின்னமுள்ளை
நிர்வாணப் பகலிலும்
தேடுகிறதென் கண்
நேற்றைய கனவில்
தவறி விழுந்ததாய்
பின் வந்த செய்தி !

விருப்பமான வழிகளை
நாங்களே
தேர்ந்தெடுத்த பிறகு
வலிகளை
ஏன்...
தாங்க மறுக்கிறோம் !

ஹேமா(சுவிஸ்)

12 comments:

Seeni said...

unmaithaan nallaa sollideenga...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

வாழ்வைக் குறித்து வடித்த கவிகண்டேன்!
தாழ்வை ஒழித்தல் தகை!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

MANO நாஞ்சில் மனோ said...

விருப்பமான வழிகளை
நாங்களே
தேர்ந்தெடுத்த பிறகு
வலிகளை
ஏன்...
தாங்க மறுக்கிறோம் !//

சரிதானே...!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹேமா,
என்ன சொல்வது..
எப்படி சொல்வது..
ஏதும் தெரியவில்லை..
வார்த்தைகளைத் தேடுகிறேன்
வழுக்கியே செல்கிறது..
வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
வாழ்க்கை நம்முடையதே!

வெற்றிவேல் said...

வாழ்க்கை இப்படித்தான்...

த.ம: 3

கவியாழி said...

கடின தருணங்களை
கடந்துகொண்டிருக்கிறேன்
விளக்கம் தேவையில்லை//அதுதான் நீண்ட நாட்களுக்குபிறகு பதிவிடுகிரீர்களோ? வருந்த வேண்டாம்

'பரிவை' சே.குமார் said...

விருப்பமான வழிகளை
நாங்களே
தேர்ந்தெடுத்த பிறகு
வலிகளை
ஏன்...
தாங்க மறுக்கிறோம் !

----

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

கூடல் பாலா said...

\\\சீரான
வார்த்தைக் கோர்வைபோல்
அழகாய்
அடுக்கடுக்காய்
எதிர்பார்த்த வண்ணத்தில்
அமைவதில்லை \\\\
வாழ்க்கை ! நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....பாடல்தான் நியாபகத்திற்கு வருகிறது...

கும்மாச்சி said...

\\
விருப்பமான வழிகளை
நாங்களே
தேர்ந்தெடுத்த பிறகு
வலிக//

இந்த யதார்த்தம் உணர்ந்துவிட்டால் இன்பம் துன்பம் எல்லாமே கடந்து போகும்.

ஹேமா said...

இன்னும் என்னை மறக்காமல் இணைந்துகொண்டிருக்கும் உங்கள் கருத்துக்கள் கண்கலங்க வைக்கிறது.இதுவும் வாழ்க்கை.நன்றி !

Unknown said...

தேர்ந்தெடுத்த வழிகளில்,வலி எனில் தாங்கவே வேண்டும்!

மாதேவி said...

வலிகளை
ஏன்...
தாங்க மறுக்கிறோம் !//

வலிகளும் கடந்துபோகும்.

Post a Comment