*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, January 10, 2012

பூக்கள் விழும் குழிகள்...

கனமற்றதான
பூக்களோடு கலந்திருக்கிறேன்
இடியப்பச் சிக்கலான
ஆட்டத்தைப் பிரிக்க
மலமுருட்டும் வண்டுகள்
விடுதலை விரும்பிகளென.

தெற்கு நரிகளின் ஊழை
மௌனங்களைக் கிழித்தாலும்
சாக்காடாய்
உறக்கம் கலையாத வழிப்போக்கர்
மனிதனே கொல்கிறான்
மனிதனே இறக்கிறான்
யாரோ அவர்கள் யாரோ
யாருக்கோ என்ன.

பொத்திக்குள் வளர்ந்த அறிவு
விரிதலில் இல்லாமல் போயிற்றோ
ஒன்றுப(ட்)ட சிநேகம்
சகோதர முகங்களில்லை
இறு(க்)கிய சாரளங்களுக்குள்
அந்நியனாகவே.

சாம்பல் பறவைகளின் வெப்பம்
ஈரப்பலா முலை வெடிக்க
சிதறுகிறது
நான் கலந்திருக்கும் வாசனை மல்லி
வி...டு...த...லை...யென உதடு பிரிந்து மூட
நாயொன்றும் காவலிருக்கிறது
வைரவருக்கு விடுதலை வேண்டி
புத்தனின் மட்டறுத்த புன்னகையோ மாறாமல்.

பிந்திய செய்திகளின்படி
இனந்தெரியாதோரால் கொல்லப்பட்ட...!!!

அதீதத்தில் முதன் முதலாக....ஹேமா(சுவிஸ்)

27 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஒன்றுபட முகங்களில்லை என்பதுவே நிதர்சனம்.

Admin said...

மனிதனே கொல்கிறான்
மனிதனே இறக்கிறான்
யாரோ அவர்கள் யாரோ
யாருக்கோ என்ன..

இப்படியான மனநிலை மாறத்தான் வேண்டும்..
வாசித்தேன்..வாக்கிட்டேன்..

சந்தேகம்

தமிழ் உதயம் said...

தனக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறபோது... எதிரியை பற்றி பேசுகிறோம.

ஸ்ரீராம். said...

வசீகர வரிகளாயினும்.....
புரியுது....ஆனா புரியலை....!

கீதமஞ்சரி said...

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் கண்டு நெஞ்சு பொறுக்காமல் பாடினான் அன்று. இன்று இப்படி மனிதர் உயிரை மனிதர் பறிக்கும் நிலைகண்டால் என்ன பாடுவான்? இப்படித்தானோ?

அதீதத்தில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் ஹேமா.

ராஜி said...

பொத்திக்குள் வளர்ந்த அறிவு
விரிதலில் இல்லாமல் போயிற்றோ
ஒன்றுப(ட்)ட சிநேகம்
சகோதர முகங்களில்லை
இறு(க்)கிய சாரளங்களுக்குள்
அந்நியனாகவே.
>>
இன்றைய யதார்த்ததை புட்டு புட்டு வைத்துவிட்டது இவ்வரிகள். வெளியில் மட்டுமல்ல வீட்டுக்குள்ளும் தனிமை தீவாய் வாழும் நிலையை தோலுறித்து காட்டிவிட்டது உங்க கவிதை

மகேந்திரன் said...

'''ஒன்றுப(ட்)ட சிநேகம்
சகோதர முகங்களில்லை
இறு(க்)கிய சாரளங்களுக்குள்
அந்நியனாகவே.'''

எனக்குப் பிடித்த வரிகள்.
இன்றைய உறவு நிலையை
பாதரசக் கண்ணாடியாய்
முகம் காட்டுகிறது.

அருமையான படைப்பு சகோதரி.

மாலதி said...

நல்ல " பா " ஆக்கம் நல்ல சுவை அவலச்சுவை எப்போதும் விரும்பி கேட்கவைக்கும் சிலவற்றைத் தூண்டும் அழவைக்கும் இந்த புத்தன் எல்லோரையும் சிரித்துக் கொண்டே கொல்லுவான். இருப்பினும் ஈரப்பலா முலை வெடிக்க என வார்த்தையை கொர்த்துளீர் இது மரபு ரீதியாக சரியில்லையோ என எண்ணத் தூண்டுகிறது .முலை எப்போதும் வெடிப்பதில்லை மொட்டு வெடிக்கும் .கண்ணதாசன் வெட்டு பட்ட காயத்திலும் விம்மி நின்ற கட்டியிலும் கட்டுப் பட்டு நின்றதொரு காலம் என பெண்களின் அல்குலை வெட்டு பட்ட காயம் என்பான் பிழை இருப்பின் சுட்டிக் காட்டலாம்

பால கணேஷ் said...

மனிதனே கொல்கிறான் | மனிதனே இறக்கிறான் | யாரோ அவர்கள் யாரோ |
யாருக்கோ என்ன. |
நிதர்சனத்தைக் கூறிய வரிகள் மனதை வலிகொள்ளச் செய்தது ஹேமா. இந்த மாதிரியான மனநிலை என்றாவது ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்புடன்தான் நாட்களை நடத்த வேண்டியுள்ளது.

Ashok D said...

நெறுக்கமாய் தொடுத்துயிருக்கிறீர்கள்

ராமலக்ஷ்மி said...

/பொத்திக்குள் வளர்ந்த அறிவு
விரிதலில் இல்லாமல் போயிற்றோ
ஒன்றுப(ட்)ட சிநேகம்
சகோதர முகங்களில்லை/

உண்மைதான் ஹேமா. நல்ல கவிதை.

சசிகலா said...

மனிதனே கொல்கிறான்
மனிதனே இறக்கிறான்
யாரோ அவர்கள் யாரோ

இந்த பொய் முகப்போர்வையை யார் கிழிப்பது அருமை

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

நல்ல கவிதை ஹேமா..வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

நாயொன்றும் காவலிருக்கிறது
வைரவருக்கு விடுதலை வேண்டி
புத்தனின் மட்டறுத்த புன்னகையோ மாறாமல்.

பிந்திய செய்திகளின்படி
இனந்தெரியாதோரால் கொல்லப்பட்ட...!!!

அவலம் கனத்த கவிதை..

துரைடேனியல் said...

Azhakana varigal. Nalla karpanai. Eppadi ithellam?

KANA VARO said...

வைரவருக்கு விடுதலை வேண்டி//


கோண்டாவில் அறிவியல் கழகம் (முந்தி ஈசன் டியூட்டரி இருந்திச்சே) இராணுவ முகாமிற்கு பக்கத்திலை இருக்கிற ஞான வைரவரோ அக்கா?

Unknown said...

கடந்த கால சோகம் இன்னும்
ஆறாது இரணமாக உள்ளது
உங்கள் கவிதைகளில் உள்ளூடாக
அவ்வப்போது வொளிவருவது
மிகவும் வேதனையே!
மனிதனை மனிதன் கொல்லும்
போது அவன் அரக்கனாகி விடுகிறான்! என்பதே உண்மை!

புலவர் சா இராமாநுசம்

சத்ரியன் said...

உள்ளுக்குள் புல்லுருவிகள் இருக்கும் வரை மாறாது இந்த ஏற்ற இறக்கங்கள்.

அம்பலத்தார் said...

சமகால மனித இயல்புகளையும், வாழ்வியலையும் மனதை ஊடுருவும் வார்த்தைகளில் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
பேச்சளவில் தான் எம் விடுதலையும் இருக்கிறது என்பதனை, அழகிய தலைப்பின்னூடாக, அர்த்தங்கள் கற்பிக்கும் வார்த்தைகள் வாயிலாக கவிதையாக்கிச் சொல்லியிருக்கிறீங்க. ரசித்தேன்.

காட்டான் said...

வணக்கம் சகோதரி..!
உங்கள் கவிதைகளை பின்னுட்டத்தையும் பார்த்து விளங்கி கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்.. ஹி ஹி

அப்பாதுரை said...

கடைசி எட்டு வரிகளின் தாக்கத்திலிருந்து மீள்வது சிரமமாக இருக்கிறது..
படமும் பிரமாதம்.

Yaathoramani.blogspot.com said...

எப்படி இப்படிச் சரளமாக உணர்வு பூர்வமாக
தொடர்ந்து பதிவுகள் தர முடிகிறது என
ஆச்சரியப் பட்டுப் போகிறேன்
ஒவ்வொரு படைப்பும் எம்முள் ஏற்படுத்திப் போகும் பாதிப்பை
வார்த்தைகளில் விவரிப்பது கடினமே

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

Marc said...

அருமை கவிதை வாழ்த்துகள்

அன்புடன் நான் said...

கவிதை உண்மை.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ananthu said...

#பிந்திய செய்திகளின்படி
இனந்தெரியாதோரால் கொல்லப்பட்ட...!!!# கவிதையில் காதல் சொல்வது மட்டுமல்ல இதயத்தை கனக்க வைக்கவும் முடியும் என்று சொல்லும் கவிதை ஹேமா !

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

Post a Comment