*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, November 11, 2010

பாசத்தின் நிறம்சொல்லும் வறுமை...

பரம்பரைத் தொழில் அல்ல
விரும்பி வேண்டியதுமல்ல.

வறுமை வாசலில் காவலிருக்க
பஞ்சம் கூரைமேல் குந்தியிருக்க
வயிறு காத்திருக்கும்
ஒற்றைப் பருக்கைக்காய்.

கண்களுக்குள் ஏக்கம் நிறைத்து
கையேந்தும்
இளம் தளிரொன்று
ஏதோ ஒரு பாட்டு
பசி கண்ணுக்குள்
சுதியும் விலகியபடி.

பரிதாபம் தாளாமல்
"வருவாயா என்னோடு
பாலும் பட்டும்
காரும் கணணியுமாய்
போகலாம்
பள்ளிக்கூடத்துக்கும்".

"வருகிறேன்...வர விருப்பம்
என்கூட அம்மாவின் சேலை
அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
அண்ணாவின் ஒரு தலைமுடி
தங்கையின் பிச்சைப் பாத்திரம்
எடுத்து வருவேன்
நினைவாக.

இருக்குமா இடம்
உங்கள் வீட்டில்"!!!

ஹேமா(சுவிஸ்)

37 comments:

எல் கே said...

:)

கவி அழகன் said...

நெஞ்சை தொட்ட கவிதை

வினோ said...

:)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பாசத்தின் நிறத்தை நெகிழ்வூட்டும்படிச் சொன்ன இந்தக் கவிதை உங்கள் வரவை அறிவிக்கிறது.வாழ்த்துக்கள் ஹேமா கரைய வைத்த கவிதைக்கு.

'பரிவை' சே.குமார் said...

நெஞ்சை தொட்ட...
கரைய வைத்த கவிதை

சாந்தி மாரியப்பன் said...

பாசத்தின் குரலும் சேர்த்த கவிதை... நல்லாருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு Hema.

logu.. said...

\\"வருகிறேன்...வர விருப்பம்
என்கூட அம்மாவின் சேலை
அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
அண்ணாவின் ஒரு தலைமுடி
தங்கையின் பிச்சைப் பாத்திரம்
எடுத்து வருவேன்
நினைவாக.

இருக்குமா இடம்
உங்கள் வீட்டில்"!!!\\

ennamo irukkunga intha varigalil..

ராஜவம்சம் said...

//வறுமை வாசலில் காவலிருக்க
பஞ்சம் கூரைமேல் குந்தியிருக்க
வயிறு காத்திருக்கும்
ஒற்றைப் பருக்கைக்காய்.//

சூப்பர்.

தினேஷ்குமார் said...

நெஞ்சம் கணக்கிறது பிஞ்சுகளின்
சுமையான சோகங்கள் தோழி

sathishsangkavi.blogspot.com said...

//கண்களுக்குள் ஏக்கம் நிறைத்து
கையேந்தும்
இளம் தளிரொன்று
ஏதோ ஒரு பாட்டு
பசி கண்ணுக்குள்
சுதியும் விலகியபடி.//

உண்மையான வரிகள்...

Unknown said...

யார் வீட்டிலும் மட்டுமல்ல,யார் மனதிலும் கூட இடம் இல்லை...

sakthi said...

"வருகிறேன்...வர விருப்பம்
என்கூட அம்மாவின் சேலை
அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
அண்ணாவின் ஒரு தலைமுடி
தங்கையின் பிச்சைப் பாத்திரம்
எடுத்து வருவேன்
நினைவாக.

இருக்குமா இடம்
உங்கள் வீட்டில்"!!!


வலியை சொல்லும் வரி

விகடனில் வெளிவந்த உங்கள் பதிவு சரியா??

Kousalya Raj said...

வறுமையின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுமா வறுமை பேசும்...?!!

:((

Radhakrishnan said...

நல்லதொரு சிந்தனையான கவிதை.

RVS said...

கல்லும் கரையும் கவிதை...

Anonymous said...

காட்சியை பிரதிபலிக்கிறது வரிக்கு வரி கவிதை வலி கண்கூட நெஞ்சை பிசைகிறது வேதனை...

//
"வருகிறேன்...வர விருப்பம்
என்கூட அம்மாவின் சேலை
அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
அண்ணாவின் ஒரு தலைமுடி
தங்கையின் பிச்சைப் பாத்திரம்
எடுத்து வருவேன்
நினைவாக.

இருக்குமா இடம்
உங்கள் வீட்டில்"!!!//

பிஞ்சின் பாசத்தை என்னவென சொல்ல தெரியவில்லை...

தமிழ் உதயம் said...

வறுமையுடன் ஆரம்பித்து, ஏக்கத்துடன் முடிந்தது. சிறந்த கவிதை.

ஸ்ரீராம். said...

வறுமையில்தான் பாசம் வருமோ.. நல்ல கவிதை ஹேமா.

அம்பிகா said...

//கண்களுக்குள் ஏக்கம் நிறைத்து
கையேந்தும்
இளம் தளிரொன்று
ஏதோ ஒரு பாட்டு
பசி கண்ணுக்குள்
சுதியும் விலகியபடி.//
நெஞ்சை தொட்ட கவிதை

சௌந்தர் said...

வறுமை ஏக்கம்... :(

Thanglish Payan said...

Awesome kavithai..

Keep posting :)

ம.தி.சுதா said...

/////வறுமை வாசலில் காவலிருக்க
பஞ்சம் கூரைமேல் குந்தியிருக்க////
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...

அன்பரசன் said...

//என்கூட அம்மாவின் சேலை
அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
அண்ணாவின் ஒரு தலைமுடி
தங்கையின் பிச்சைப் பாத்திரம்
எடுத்து வருவேன்
நினைவாக.//

கவிதை உருக்குகிறது.

நேசமித்ரன் said...

ம்ம் நல்ல முயற்சி

Bibiliobibuli said...

கொடிது, கொடிது வறுமை கொடிது. அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்று ஒளவையார் சொன்னது ஞாபகம் வருகிறது.

சத்ரியன் said...

பிறர் வலியைக் கண்டு பரிதாபப்பட பழகியிருக்கிறோமேத் தவிர, பங்கிட்டுக்கொள்ள பழகிக்கொள்ளவில்லை ஹேமா.

Ramesh said...

வலித்த வறுமை.. பாசத்தின் கவிதை

Anonymous said...

நல்லா இருக்கு ஹேமா..
வறுமை வலி.. :(

தமிழ்க்காதலன் said...

மிக ஆழ்ந்த உணர்வுகளை கிளறிய கவிதை. தேசத்தின் அவலம், இயலாமையின் கொடுமை, இன்னும் வாழத் துடிக்கும் நம்பிக்கை என முரண்பட்ட வாழ்க்கைப் பேசுகிறது கவிதை. மிக அழகு. நன்றி. உங்கள் பிளாக் தலைப்பில் "வானம் வெளித்த" என்ற இடத்தில் "வெளுத்த" என்ற சொல் சரியாய் இருக்கும் என்பது என் எண்ணம். கவனியுங்கள். வருகை தாருங்கள்...( ithayasaaral.blogspot.com )

ஆ.ஞானசேகரன் said...

//இருக்குமா இடம்
உங்கள் வீட்டில்"!!!//

ம்ம்ம் அருமை....
வணக்கம் ஹேமா...

அப்பாதுரை said...

உளைச்சலை உண்டாக்கிய வரிகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

விரும்பி ஏற்றதில்லை... ஆரம்பமே.. அருமை.

நெஞ்சை தொட்ட கவிதை
நல்லா இருக்குங்க...!!

ஹேமா said...

இந்தக் கவிதையின் பொருள் சரியென்றே நினைக்கிறேன்.ஆனால் ஏதோ ஒன்று தவறவிடப்பட்ட மாதிரி உணர்கிறேன்.

என்றாலும் ஊக்கமளித்த...

கார்த்திக்(LK)...

யாதவன்...

வினோ...
உங்கள் வீட்டில் ஏதாவது விஷேசமா ?

சுந்தர்ஜி...

குமார்...

சாரல்...

ராதாகிருஷ்ணன் ஐயா...

லோகு...

ராஜவம்சம்...

தினேஸ்...

பிரபு...

சங்கவி...ரொம்ப நாளுக்கப்புறம்!

செந்தில்...நேத்தும் உங்க கவிதை ஒண்ணு கேட்டேன் வானொலியில் !

சக்தி...

கௌசி...

Dr,ராதாகிருஷ்ணன்...

ஆர்.வி.எஸ்...

தமிழரசி...

தமிழ்...

ஸ்ரீராம்...

அம்பிகா...

சௌந்தர்...

அஷோக்...உங்க பின்னூட்டம் புரியல !

தங்கிலிஸ் பையன்...

சுதா...

அன்பு...

நேசா...

ரதி...

எஸ்.கே...

சத்ரியா...

றமேஸ்...

பாலா...

தமிழ்க்காதலன்...முதல் வருகைக்கு அன்பு நன்றியும் வணக்கமும் !

ஞானம்..

அப்பா...

ஆனந்தி...எங்கே அடிக்கடி காணமுடியவில்லையே தோழி !

அத்தனை என் தோழமைக்கும்
நன்றி நன்றி !

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//ஆனந்தி...எங்கே அடிக்கடி காணமுடியவில்லையே தோழி !//

அடிக்கடி ஆன்லைன் வர முடியவில்லை தோழி.. வர முயற்சி செய்கிறேன்.. :-)

உங்கள் அன்பிற்கு நன்றி..!

தமிழ் said...

வலி

MAHESWARAN said...

சாப்படாமல் இருந்து அனுபவித்து பார்த்தேன் ..உள்ளம் துளைத்த அனுபவ வரிகள் சகோதரியே

Post a Comment