*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, June 07, 2008

இன்றைய செய்திகளின் வலி...

என்ன இது!
உயிர்களின் விலை
பெற்றோலை விடவும்
இத்தனை மலிவாய்
இலங்கையில்.

இரத்தத்திலேயே
பிரயாணம் செய்யும்
அரசியல்வாதிகள்.
பெற்றோலாய் இருந்தால் என்ன!
பொதுமக்களின்
குருதியாய் இருந்தால் என்ன!

இலட்சிய புருஷர்கள் அவர்கள்.
நோக்கமெல்லாம்
பதவியும்...புகழும்
கதிரையும்...அதிகாரமும்.
யாரும் எக்கேடும்
கெட்டுப் போகட்டுமே.

மக்கள் இல்லாத
அரசாங்கம்
நடத்தக் கூடத் தயாராய்.

அது சரி...
பேய் பிசாசுகள் என்பதும்
பழி வாங்கும் என்பதும்
உண்மையா?

உண்மையென்றால்
எத்தனை பேய்கள்
எப்படியெல்லாமோ பழி வாங்குமே
இவர்களை இலங்கையில்.
அது கூடப் பொய்யான
பிரச்சாரமோ
பித்தலாட்டமோ
அரசியல் போல.

இல்லை...
பேய்களே பயந்து ஒதுங்கும்
பேய்களோ
எங்கள் அரசியல்வாதிகள்.

எப்படியோ
அழியும்...
இலங்கை மக்கள் ஒழிக!

வாழ்க...
இலங்கை அரசியலும்
அரசியல்வாதிகளும்!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

Anonymous said...

enna Hema rommpave kovama irukkinga pola????naan onnume solla illa pa.ennanga... ulakathila paiy pisasu irukkuthunga.ippave unga arasiyal vathingalai paiythane pidichu aadikiddu irukku.ippidi kovappadama udamapaiyum pathukkongaHema.supper...
vazhthukkal.Ram

Post a Comment