*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, February 27, 2008

நான்கு சிறகுகள்

சிந்தித்துக்
கொண்டிருந்தேன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
போதவில்லை எனக்கு...
சிறகுகள் இரண்டு
தனிமையில் பறக்க
துணிவும் இல்லை...
இறைவன் தந்தான்
உன்னை எனக்கு...
இன்னும் இரண்டு
சிறகுகள் சேர்ந்தன.
வருகிறாயா என்
இனிய நண்பனே...
இயலும் இப்போது...
உலகின் தேடலகள்
பலவிதம் பலவிதம்...
இறகுகள் இப்போ
நானகாய் ஆனதே...
இன்பமோ துன்பமோ
தேடலகள் சுகமாய்
மிக சுலபமாய்...
தனிமையில் தேடல்
சோர்வுதான் மிச்சம்...
உன் துணை சேர்ந்ததால்
உற்சாகமே உணவாய்...
என் சிறகுகள்
உனக்காய்
உன் சிறகுகள்
எனக்காய்
இடம் மாறி
போகிற போது
மனமும் சேர்ந்து
பறக்கிறதே...
அன்பின் சக்தி
இதுதானோ!!!

ஹேமா(சுவிஸ்)2007

1 comment:

விச்சு said...

நண்பனும் உடன் சேர்ந்ததால் நம்பிக்கையே சிறகாய் பறக்கிறது.

Post a Comment