*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, February 21, 2008

சர்வதேச மனித உரிமைகள் தினம்...


சந்தோசம்...
மனித உயிர்களுக்கும்...
உரிமைகளுக்கும்...
இலங்கைக்கும்
சம்பந்தமேயில்லையே.

மண்டை ஓட்டு
மேடையில்
தமிழன் குருதியில்
சால்வை போர்த்தும்
மாண்புமிகு
மகிந்தவின் ஆட்சியில்
மனித உரிமைகள் தினம்.

சிரிப்பாயில்லை!!!!!!!
காக்கைகளும் குருவிகளும்
மிருகங்களும் கூட
சுதந்திரமாய் உலவும் உலகில்,
இலங்கையில் மாத்திரம்
திறந்த சிறைச்சாலைகளிலும்
மூடிய சிறைச்சாலைகளிலுமாய்
பயங்கரவாதிகள் என்ற
பட்டத்தோடு தமிழர்கள்.
இவர்களைக் காக்க
ஒரு அரசாங்கம் வேறு.

இங்கு..... எப்படி....
மனித உரிமைகள்.
கைப்பொம்மைகளையும்
கைதிகளையும் காக்க
ஒரு கபட அரசாங்கம்.

தனக்கே தனக்காய்
தனக்கென்று
படைத்த பெருமிதத்தோடு
மகிந்த சிந்தனை...
புத்தனின் சிந்தனை
மறந்தவராய் ராஜபக்ச.

தாயிலும் மேலானவன்
அன்பையே போதித்த
சித்தார்த்தனின் மைந்தன்
மனித வேட்டையில் வல்லவராய்.
உண்மையில்
தலதாமாளிகையின்
மூலஸ்தானத்தில்
எந்த இளிச்சவாயனின் பல் ?

முஸ்லிம்கள்
தாய் தேசம் சவூதியாம்.
தமிழர்களின்
தாய் தேசம் இந்தியாவாம்.
அப்படியென்றால் இவர்களின்
திட்டம்தான் என்ன?

சேனனாயக ஆட்சி...
பண்டாரநாயக ஆட்சி...
தொடரும்...
மகிந்த ஆட்சி...
மனங்களில் மாற்றமில்லாத
ராட்சத ஆட்சியாளர்கள் நாட்டில்,
மனித உரிமைகள்
பேச்சிலும் பேப்பர்களிலும்
தூக்கம் தொலைத்த
தமிழனின்
கற்பனைக் கனவிலும்தான்.

ஆயுதங்களையும் கொடுத்து
கண்காணிக்கக்
குழுவையும் கொடுக்கும்
சரவதேசம்
முழுதுமாய் கண்டும் கேட்டும்
வாய் மூடி மெளனிகளாய்.
பாவப்பட்டுப் பிறப்பெடுத்த
ஜென்மங்களாய் இலங்கையில்
தமிழர்கள்தானே!!!!!!!

ஹேமா(சுவிஸ்) 11.12.2007

1 comment:

விச்சு said...

மண்டை ஓட்டையே
வேட்டியாய் உடுத்தி,
தமிழ் இரத்தத்தையே
சால்வையாய் போடும்
மகிந்தவின் ஆட்சியில்
மனித உரிமைகள் தினம்.
சிரிப்பாயில்லை!!!!!!!
என்ன ஒரு வேகம்! உங்கள் எழுத்துக்களில்.

Post a Comment