பனி தேசமும்என் தனிமையும்
என்னை தன்னிச்சையாய்
இயங்க விடுவதாயில்லை.
காலநிலை கனிய
சூரிய அணைப்பில் முளைக்கும்
மேகநிறப் பூவின் விதையொன்றை
விருப்பத்தோடே
மொட்டை மாடிச் சாடியில்தான்
நட்டுவிட முடிந்தது.
நாளொன்று விடிய
காளான் குடையோடு
கண் வெளிக்கும்
அந்த மண்ணுக்குள்.
முளை வெடிக்கும்
வளரும்
பிரம்புப் பந்தலில்
கொடி படரும்
மேக நிறத்தில்
பூக்களும் குலுங்கும்
காத்திருப்பில்
கண்கள்தான்
கண்டல் கண்டு
நீலமாய் மாறியபடி.
முளைத்தலும்
படர்தலும்
வளைதலும்...வளைத்தலும்
மொட்டும் பூவும்
என்னால்...என்னால்
என்ன இருக்கிறது என் கையில் !
எல்லாம்
வெம்மை விசுக்கும்
சூரிய வீச்சின்
விருப்பத்தோடே!!!
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||








