*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, November 12, 2014

பட்டகம்...

நமைந்துகொண்டிருக்கிறது
நிலைக் கண்ணாடி.

அடிக்கும் மழையில் கரைகிறது
வரைந்த
சிவந்த குதிரையொன்று.

உறைபனிக் குதிரைகள்
உண்ண வைத்த கொள்ளில்
கண்களின் அசைவு.

பயன் அறுத்த பின்னும்
எகிறிக் குதித்தோடுகிறது எலிகள்
மீண்டும்
பதப்படுத்தப்பட்ட மண்ணில்.

உடைவதும்
தெறிப்பதும்
கரைவதும்
ஓடுவதுமான....

தூரத்து நினைவுகளைச் சரிசெய்து
களைத்துக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது
இந்த வெண்பனிக் காலத்திலும் வேர்க்க வேர்க்க!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

4 comments:

'பரிவை' சே.குமார் said...

தூரத்து நினைவுகளைச் சரிசெய்து
களைத்துக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது
இந்த வெண்பனிக் காலத்திலும் வேர்க்க வேர்க்க!!!

அருமை... அருமை...

தனிமரம் said...

ஓடவேண்டிய தேசம் பனியிலும். கவிதை அருமை.

கவியாழி said...

வெண்பனிக் காலத்திலும் வேர்வையா? இருக்கலாம்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

Post a Comment