*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, January 03, 2014

கூத்துக்காரன்...

மாட்சிமை பொருந்திய
கடவுள்களை
லஞ்சம் கொடுத்து
பாராட்டிக்கொண்டிருந்தான்
காரியக்காரன்.

வெளியில் வைத்தே
புன்சிரிப்போடு
குறளித் தேவைதை பற்றிய கதையைச்
சொல்லிக்கொண்டிருந்தார் அவர்
குறுகிய உருவம்
குறுணிபோல
குட்டையாய்
குட்டன்போலவென்று.

பேச்சை மாற்றியபோதும்
தடுமாறாத கடவுள்
சூத்திரப்பாவையின்
கயிற்றைச் சரிசெய்யத்தொடங்கியபடி
குட்டிச்சாத்தான்பற்றிய விளக்கத்தை
விளக்கியபடியே.

கடவுள் சொன்னால்
எல்லாமே சரிதானென
ஏற்றுக்கொண்டவன்
தானுமொரு குட்டிக்கடவுளை
செய்யத்தொடங்கியிருந்தான்
பலரது
கோணல் கண்களில்
வாய்களில்
தொங்கப்போவதை
அறியாமல்!!!

ஹேமா(சுவிஸ்)

5 comments:

கும்மாச்சி said...

\\கடவுள் சொன்னால்
எல்லாமே சரிதானென
ஏற்றுக்கொண்டவன்??

உண்மைதானே.

வாழ்த்துகள் ஹேமா.

Yaathoramani.blogspot.com said...

கடவுள் சொன்னால்
எல்லாமே சரிதானென
ஏற்றுக்கொண்டவன்
தானுமொரு குட்டிக்கடவுளை
செய்யத்தொடங்கியிருந்தான்
பலரது
கோணல் கண்களில்
தொங்கப்போவதை
அறியாமல்!!!//

ஆழமான பொருளுடைய
அற்புதமான கவிதை
மிகக் குறிப்பாக முடித்த விதம்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள் சகோதரி.

Unknown said...

நன்னாருக்கு,ஜமாய்ங்கோ!

அ. வேல்முருகன் said...

நாங்கள் கோணல் கண்களோடா கடவுளை பார்க்கிறோம்

Post a Comment