*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, December 03, 2010

உன் பேச்சிலே...

காதல்
கடவுள்
கருணை
மலர்கள்
மலைகள்
மழை
குழந்தை
வலி
வேதனை
விரகம்
ஓவியம்
கவிதை
இசை
தேவதைகள்
இரவு
பிறைநிலவு
மறையும் சூரியன்
ஆனந்தம்
அழுகை
வீரம்
ஏழ்மை
இரைச்சல்
சிரிப்பு
அலையோசை
என அத்தனையும் காண்கிறேன்.

உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து
இன்னும்...
என் கவிதைகளுக்குள்
உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!

ஹேமா(சுவிஸ்)

57 comments:

அன்பரசன் said...

அருமையான கவிதை.

சத்ரியன் said...

//உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!//

ஹேமா,

உயிர்ப்பான காதல் கவிதை...!

(யாரந்தக் காதலன்)

Madumitha said...

காதல் வந்துவிட்டால்
உடம்பே ஒரு நரம்பு வாத்தியக்
கருவியாய் மாறி விடுகிறது.

Madumitha said...

காதல் வந்துவிட்டால்
உடம்பே ஒரு நரம்பு வாத்தியக்
கருவியாய் மாறி விடுகிறது.

Unknown said...

உயிர்ப்பூ மலர்தல் அருமை.

சத்ரியன் said...

காதல்...முதல்,
அலையோசை....வரை
பட்டியல் சுட்டுகிற
எல்லாமுமாய் ஒருத்தரேவா இருக்கார்.
பாவி மனுஷன் ரொம்ப நல்லவரா இருக்காரே!

(என் கையில சிக்கனும்....!)

நேசமித்ரன் said...

யாதுமாதல் வாழ்வாயிருக்கிறது உறவாகவும் கவிதை போல

தொடர்க ஹேமா

Chitra said...

என் கவிதைகளுக்குள்
உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!



...simply superb!

எல் கே said...

அருமை

சாந்தி மாரியப்பன் said...

உயிர்த்தலில் மலர்ந்த பூவின் வாசம், நரம்புகளெங்கும் பரவுகிறது ஹேமா..

அருமை.

பவள சங்கரி said...

உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து
இன்னும்...
என் கவிதைகளுக்குள்
உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!
அருமை....மனததைத் தொட்ட வரிகள்......

Riyas said...

//பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!//

ம்ம்ம்ம் காதல் உயிரில் கூட பூ பூக்குமா...

தமிழ்க்காதலன் said...

நல்ல கவிதை.

உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து
இன்னும்...
என் கவிதைகளுக்குள்
உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!

ரசித்தேன்.

அத்திரி said...

புதுசா என்ன சொல்ல...........யோசிச்சிட்டு இருக்கேன்

சௌந்தர் said...

உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து
இன்னும்.../////

எங்க பார்த்தாலும் கரைத்து கொண்டே இருக்கிறது இந்த காதல்

Kousalya Raj said...

//பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!//

இங்கேயும் பூத்து விட்டதா ஹேமா...? வாழ்த்துக்கள்....!! :))

பட்டியலில் விடுபட்டது ஏதும் இருக்கிறதா...?

ராமலக்ஷ்மி said...

வரிகள் அழகு ஹேமா.

முனைவர் இரா.குணசீலன் said...

தென்றலைவிட மென்மையாய்..

ஓர் கவிதை! !

அழகு!!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா இருக்குங்க ஹேமா!

விஜய் said...

முகிலைவிட இதமாய்
அகிலைவிட மணமாய்
இருப்பவருக்கு

எனது வாழ்த்துக்கள்

விஜய்

தமிழ் உதயம் said...

தென்றலை போல் சுகமாய்,
மலரை போல் அழகாய் - இருந்தது கவிதை.

Ravi kumar Karunanithi said...

அருமை.

but my opinion is love is temporary affection b/w 15-22 ages.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஹேமா.. வெகு நாட்களுக்குப் பிறகு.. நல்லா இருக்கீங்களா?

கவிதை பத்தி புதுசா என்ன சொல்ல முடியும்? எளிமையும் அழகு..

dheva said...

எப்டி பாருங்க .....காதல் ஒரு அற்புதமான உணர்வு.....

உயிரின் பூ பூக்கும் பதத்திற்கு பின்னால் இருக்கும் அற்புத உணர்வினை அறிவேன்......

கவிதையின் மூலம் காதல் உணர்வு....செம!!! செம ஹேமா!

Anonymous said...

உயிரில் பூத்த பூவின் வாசம் வரிகளாய் எங்களை வசப்படுத்தியது ஹேமா :)

sakthi said...

உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!


அழகு வரிகள்

Anonymous said...

//முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்//

அவ்வளவு மென்மையானதா???

Anonymous said...

அருமை தோழி!

logu.. said...

Uyirin poo..


ithu vadave vadathu..
unga kavithaiyai pola..

Raja said...

நல்ல கவிதை...வாழ்த்துக்கள் ஹேமா ...

கவிநா... said...

நீண்ட உங்கள் ரசனைப்பட்டியல் அழகு உங்கள் கவிதையைப்போலவே...

--
அன்புடன்
கவிநா...

வினோ said...

/ பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!! /

அருமை ஹேமா.. நன்றாக பூக்கட்டும்...

Ashok D said...

எண்ணங்களில் அழகாய் பூத்து களிக்கிறது ’வானம் வெளித்தபின்னிலும்’ இப்பூங்காவில்... அழகாய் அற்புதமாய் :)

நசரேயன் said...

//காதல்
கடவுள்
கருணை
மலர்கள்
மலைகள்
மழை
குழந்தை
வலி
வேதனை
விரகம்
ஓவியம்
கவிதை
இசை
தேவதைகள்
இரவு
பிறைநிலவு
மறையும் சூரியன்
ஆனந்தம்
அழுகை
வீரம்
ஏழ்மை
இரைச்சல்
சிரிப்பு
அலையோசை
என அத்தனயும் காண்கிறேன்.
//

எந்த தொலைக்காட்சியிலே ?

நசரேயன் said...

//உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து//

தோசை மாவாவா? இட்லி மாவாவா ?

//இன்னும்...
என் கவிதைகளுக்குள்
உறங்கிக் கிடந்த//

கொலை வெறி கவிஜயை

//மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!//

அரலிப்பூ

ஜோதிஜி said...

வீடு சுத்தமாகி நல்ல அமைதியும் சந்தோஷமும் கிடைத்து விட்டதோ?

வரிசைப்பட்டியல் கச்சிதம்.

மாணவன் said...

//இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!//

அருமை அருமை...

வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை..

தொடரட்டும் உங்கள் பணி

வாழ்க வளமுடன்

நிலாமதி said...

கவிதையும் உணர்வுகளும் அழகாய் . உயிர்ப் பூ .......... புத்துணர்வு தரட்டும்.

'பரிவை' சே.குமார் said...

வாவ்...
அருமையான கவிதை...
ரொம்ப நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான கவிதை.

Unknown said...

பாராட்ட வார்த்தைகளே இல்லை ...

Prabu M said...

உடலும் உள்ளமும் சேர்ந்து சிலிர்த்ததன் சாட்சியாக இங்கு பின்னூட்டமிடுகிறேன்...
உங்கள் மொழி ஆளுமையும், தமிழில் உங்கள் தன்னம்பிக்கையும், பார்வையும், அழகியலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதையிலும் என்னைப் புதிதாக ஒருமுறை வியக்கவைத்துவிடுகிறது.... உங்கள் வாசகனாய் இருந்து பின்னூட்டங்கள் மூலம் பேசிக் கொள்வதைப் பெருமையாக உணர்கிறேன்....

உண்மையுடன்,
பிரபு எம்

ஸ்ரீராம். said...

உயிரில் கலந்த உறவு. உறவில் பூத்த கவிதைப் பூ.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரே வார்த்தை... அற்புதம்!!!

RVS said...

உயிரில் கலந்த உறவே.. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு...(ச்சே.. இதை ஏற்கனவே வைரமுத்து எழுதிவிட்டார்.. உங்களைப் போல் கவிதையில் என்னால் பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும்.. கவிதை மிக நன்று.. )
;-)

பனித்துளி சங்கர் said...

உணர்வுகளின் வெளிப்பாடாய் உயிர் பெற்று காட்சி தருகிறது கவிதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை . பகிர்வுக்கு நன்றி

தினேஷ்குமார் said...

உன் அன்பும் ஆசையுமாய்
என்னைக் கரைத்து
இன்னும்...
என் கவிதைகளுக்குள்
உறங்கிக் கிடந்த
மன ஓசைகளை
முகிலைவிட இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!

அற்புதமான வரிகள் தோழி .......
காதல் பூ உயிர் பெற்று உலவும் நேரமிதோ

நிலாமகள் said...

நல்லா இருக்குங்க ஹேமா!

Anonymous said...

sugam sumakkum kathalin vasantha kaalam kavithaiyaai peranthu irukirathu.. kavithai pathi malarintha rojavaai azhagu hema..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹ்ம்ம்.. உயிரின் பூ..

உவமை சூப்பர்.. அழகா இருக்குங்க... கவிதை. ரசித்தேன்.. :-))

Unknown said...

//இதமாய்
இசையைவிட மெல்லியதாய்
இரத்த நரம்புகளை வருட
பூக்கிறது
உயிரின் பூ ஒன்று!!!//

முடிவு மிக அருமை..
வார்த்தைகளின் தொகுப்பு நன்றாக இருந்தது..

Unknown said...

//காதல் வந்துவிட்டால்
உடம்பே ஒரு நரம்பு வாத்தியக்
கருவியாய் மாறி விடுகிறது.//

ஆகா...

ம.தி.சுதா said...

அருமையிலும் அருமை...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஎன அத்தனையும் காண்கிறேன்ஃஃஃஃ

என்று சொல்லியே அத்தனையையும் கண்டு காண்பித்துவிட்டீர்களே....

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

அப்பாதுரை said...

மூச்சு முட்டுதுங்க..

Anonymous said...

முதன் முறை தங்கள் பதிவுலகில் நுழைகிறேன். வடிவமைப்பே அசத்துகிறதே! இன்று முதல் பின் தொடர்வோர் குழுவில் இணைகிறேன். பெருமையுடன். நான் குப்பை கொட்டும் இடம் madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com. நேரம் இருந்தால் எட்டிப்பார்க்கவும்.

Nathanjagk said...

ஓஹோ.. பின்னூட்டம் எழுதற யாருக்கும் பதில் எழுத மாட்டீங்களோ..?
எப்போ இருந்து இந்த ......ப் பழக்கம்????

Post a Comment