*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, March 01, 2010

ஒற்றை வார்த்தைக்கு...

உன் தூண்டிலில் சிக்கிக்கொண்ட
என் ஒற்றை வார்த்தைக்குத்தான்
உன் அகராதிக்குள்
எத்தனை அர்த்தங்கள்.

அடம்
கர்வம்
றாங்கி
பிடிவாதம்
செருக்கு

ஒவ்வொரு வார்த்தையையும்
தூண்டில் முள்
காயப்படுத்துவதை அறிந்தும்
பிடிபட்ட மீனுக்கு
உணவளிப்பதாய் சொல்கிறாய்.

வட்டமாயோ சதுரமாயோ
ஒரு தொட்டித் தண்ணீருக்குள்
என் வார்த்தைகளைச் சேமிக்காமல்
ஒரு நதியோ
ஆறோ பார்த்துச் சேர்த்துவிடு.

அங்கே....
கடவுள்
அன்பு
ஆதாரம்
தேவை
எதிர்பார்ப்பு
ஆதங்கம்
ஆறுதல்

ஏன்
^
^
^
^
^
^
^
காதல்

என்றுகூட... !!!

ஒரு மாத விடுமுறை.குழந்தை நிலாவுக்குச் சற்று ஓய்வு.
மீண்டும் சந்திக்கலாம் உறவுகளே.

ஹேமா(சுவிஸ்)

52 comments:

அன்புடன் நான் said...

கவிதை மிக நல்லாயிருக்கு

சென்று வாருங்கோ.... காத்திருக்கிறோம்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!வாங்க!வாங்க!

சத்ரியன் said...

//வட்டமாயோ சதுரமாயோ
ஒரு தொட்டித் தண்ணீருக்குள்
என் வார்த்தைகளைச் சேமிக்காமல்
ஒரு நதியோ
ஆறோ பார்த்துச் சேர்த்துவிடு.//

ஹேமா,

நல்லாத்தான் இருக்கு..!

நிலாவுக்கு ஓய்வா?
அப்படின்னா ஒரு மாசத்துக்கு இருட்டுலதான் .....! சரி சரி.

சத்ரியன் said...

ஹேமா,

பயணம் சிறக்க வாழ்த்துகள்.

கும்மாச்சி said...

மகிழ்ச்சியான விடுமுறைக்கு வாழ்த்துகள், ஹேமா

தமிழ் உதயம் said...

சந்தோஷமா போயிட்டு வாங்க.... ஹேமா

Ashok D said...

//காதல்

என்றுகூட... !!!//

காதல் உட்பட..!!! என்றும் முடித்திருக்கலாம், நல்லாவந்திருக்குங்க.... ரொம்ப நாள் கழித்து நிறைவாய், Keep it up

ஒரு மாதம்தானே சடுதியில் ஓடிவிடும் :), take care & have a nice journey

நினைவுகளுடன் -நிகே- said...

அழகான கவிதை
உங்கள் விடுமுறை சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்

Anonymous said...

வார்த்தைகள் விளையாடுகிறது உன் கைகளில் ஹேமா..happy holidays..

மாதேவி said...

மகிழ்வுடன் போய்வாருங்கள் ஹேமா.

சிவாஜி சங்கர் said...

கவிதை நன்று... பயணம் இனிதாகுக..

rvelkannan said...

கவிதை நன்று தோழி
பயணமும் நாட்களும் சிறக்க வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

மகிழ்ச்சியான விடுமுறைக்கு வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

நல் வாழ்த்துகள் ஹேமா!

வந்த பின் கவி வரிகளில் நிலாவோட சந்தோஷ நாட்கள் இருக்கட்டும்.

கலா said...

அடம்
கர்வம்
றாங்கி
பிடிவாதம்
செருக்கு\\\\\

ஒரு ஆணுக்கு காதலியாகவோ,
மனைவியாகவோ ஆகிவிட்டால்...
அதுவும் படித்த,அறிவுடன் பேசக்கூடிய
விளக்கங்கள் சொல்லும் பெண்ணாயும்
இருந்துவிட்டால்....{சில}ஆண்கள்
கொடுக்கும் பட்டந்தான் மேல்
இருப்பவைகள்.

ஓர் ஆணிடம் ஓர் பெண் மாட்டித் தவிப்பதை
எளிமையாய்....எழுதிவிட்டார் எங்கள் ஹேமா

அது நீங்களாயும் இருக்கலாமல்லவா!!??

ரிஷபன் said...

புதிய உற்சாகத்துடன் வாங்க..

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் ஹேமா.

விடுமுறையை இனிதாக கழியுங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அய்யயோ இனிமே ஒரு மாதத்துக்கு ஹேமாவின் அழகான கவிதையை காணமுடியாதே !!

பயணம் இனிதாய் வெற்றியாய் அமைய வாழ்த்துகள் ஹேமா.

க.பாலாசி said...

//வட்டமாயோ சதுரமாயோ
ஒரு தொட்டித் தண்ணீருக்குள்
என் வார்த்தைகளைச் சேமிக்காமல்
ஒரு நதியோ
ஆறோ பார்த்துச் சேர்த்துவிடு.//

போகும்போது தூவிவிட்ட இறையா இது.... அருமை...

Jerry Eshananda said...

அசத்தல் வரிகள்,அசந்து போனேன்

- இரவீ - said...

விடுமுறை + பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள் ஹேமா!

M.S.R. கோபிநாத் said...

நல்ல வரிகள். விடுமுறைக்குப் பிறகு புத்துணர்சியுடன் வந்து புதுமையாய் எழுதுங்கள்.

vidivelli said...

நல்ல வரிகள் நிறைந்த கவிதை.....
பிடிச்சிருக்கு............
சென்று வாருங்கள்...........

கண்ணகி said...

ஒற்றை வார்த்தை.....

எத்தனையோ சொல்கிறது.சென்றுவாருங்கள்...காத்திருக்கிறோம்.

நசரேயன் said...

//
உன் தூண்டிலில் சிக்கிக்கொண்ட
என் ஒற்றை வார்த்தைக்குத்தான்
உன் அகராதிக்குள்
எத்தனை அர்த்தங்கள்.
அடம்
கர்வம்
றாங்கி
பிடிவாதம்
செருக்கு
//

எதுக்கு இப்படி திட்டுறீங்க

//
ஒவ்வொரு வார்த்தையையும்
தூண்டில் முள்
காயப்படுத்துவதை அறிந்தும்
பிடிபட்ட மீனுக்கு
உணவளிப்பதாய் சொல்கிறாய்.//

அது என்ன மீன் சால மீனா

//வட்டமாயோ சதுரமாயோ
ஒரு தொட்டித் தண்ணீருக்குள்
என் வார்த்தைகளைச் சேமிக்காமல்
ஒரு நதியோ
ஆறோ பார்த்துச் சேர்த்துவிடு.
//


தொட்டி செவ்வகமா இருந்தா கடலா ?



//
அங்கே....
கடவுள்
அன்பு
ஆதாரம்
தேவை
எதிர்பார்ப்பு
ஆதங்கம்
ஆறுதல்
//

ஆனா இங்கே கும்மி மட்டும்

//

ஒரு மாத விடுமுறை.குழந்தை நிலாவுக்குச் சற்று ஓய்வு.மீண்டும் சந்திக்கலாம் உறவுகளே.
//

வன்மையாக கண்டிக்கிறேன் கும்மி பதிவர் சங்கம் சார்பாக

meenakshi said...

விடுதலை! ரொம்ப பெரிய விஷயம் ஹேமா. அவ்வளவு எளிதில் கிடைத்து விடுமா, என்ன??
சோகமான கவிதை! ஊருக்கு போகும்முன் ஒரு சந்தோஷமான கவிதை எழுதிட்டு போக கூடாதா?

நல்லபடியா, சந்தோஷமா ஊருக்கு போயிட்டு வாங்க!

பா.ராஜாராம் said...

நல்லாருந்ததுடா.

பத்ரமா போய்ட்டு வா.

ப்ரியமுடன் வசந்த் said...

சேர்த்திடலாம் ஹேமா டோண்ட்வொர்ரி....

பத்திரமா போயிட்டு வாங்க அடுத்த மாசம் நானும் ஊருக்கு போறேனே..
வவ்வவவவே....

கலா என்ன மெயில் அனுப்பிட்டாங்களா ஹேமா?

என்ன கேட்கணும்?

Thenammai Lakshmanan said...

தெரியாமல் விட்ட ஒற்றை வார்த்தை தூண்டிலாகி விடுவது உண்மைதான் ஹேமா ஹாலிடேயை என்ஜாய் பண்ணிட்டு வாங்க

Nathanjagk said...

வார்த்தை - மீன் என்ற உருவகங்களில் ஆச்சரியம் இருக்கிறது. ​ஒரு சீரான நடையில் இருந்திருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும்.

மிக நேரடியான கவிதைகள் (உம்: சின்ன உராய்தலின் கிளர்ச்சியும்
அழுந்தும் கைகளின் தயக்கமும்
திருட்டு முத்த முயற்சிகளும்
ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கின்றன.... ) அனைவருக்கும் பொதுவான காட்சிகளைத் தருகிறது. அதன் தாக்கமும் அழுத்தமானது. ​

அரங்கப்பெருமாள் said...

//தேவை
எதிர்பார்ப்பு
ஆதங்கம்
ஆறுதல்//

இவை அத்தனையும் கலந்த கலவைக்கு காதல் என்று பெயர்.

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

நல்ல கவிதை. ஒரு மாத ஓய்வை அனுபவியுங்கள்..மீண்டும் வாருங்கள்

அப்துல்மாலிக் said...

நல்ல வரிகள்

சந்தோஷமாக கொண்டாடுங்கள்

அம்பிகா said...

கவிதை அருமை.
விடுமுறை சிறக்க வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

கவிதை அருமை ஹேமா...
விடுமுறையை இனிமையாகக் கொண்டாடுங்கள்...

விஜய் said...

கவிதை அழகு வலி

பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்

விஜய்

Anonymous said...

கவிதைக்குச் சித்திரம் அழகா? சித்திரத்துக்கு கவிதை அழகா?

(உங்கள் கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பை ஊர் சுற்றலில் இழந்தேன். விட்டதையெல்லாம் பிடிக்க வேண்டும்.)
-அப்பாதுரை

thiyaa said...

நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

பித்தனின் வாக்கு said...

விடுமுறையை நல்லா களியுங்கள். ஆனா எங்களை மறந்து விடாதீர்கள். அப்ப அப்ப நம்ம பிளாக் பக்கமும் வந்து சிரிச்சுட்டுப் போங்க.

Muniappan Pakkangal said...

Nice Hema,have a fantastic holiday.

தமிழ் அஞ்சல் said...

வற்றவில்லை உங்கள் சிந்தை வளம் ...வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

ஹெமு கவிதை இல்லாமல் போரடிக்குது. இன்னமும் ஒரு மாசம் முடியவில்லையா? சீக்கிரம் வாங்க.

தமிழ் மதுரம் said...

அப்ப இனி ஏப்ரல் தான் வருவீங்களோ? அக்கா எப்படிச் சுகம்??

அன்புடன் மலிக்கா said...

தோழியே அருமை கவிதை..

சென்றுவாருங்கள் நலமோடு வளமாக..

Thenammai Lakshmanan said...

Hema When will u come...?

plz come soon pa ...

missing U...

Thenu...

ஜோதிஜி said...

அன்றைய ஓற்றை வார்த்தை இந்தநீண்ட பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் என்ன பொருத்தம்?

பனித்துளி சங்கர் said...

கவிதை அருமை !

V.N.Thangamani said...

என்னை போலவே எழுதாமல்
நீட்டிக்கிரீர்களோ.
வாழ்க வளமுடன்.
அன்போடு வி.என்.தங்கமணி.

DREAMER said...

கவிதை அருமை..!

-
DREAMER

Uma P said...

அருமையா இருக்கு உங்களுடைய ஒவ்வொரு கவிதைகளும்

Raja said...

பிரமாதமாய் இருக்குங்க...

விச்சு said...

ஒற்றை வார்த்தையில் உள்ளம் கொள்ளை போகுது...

Post a Comment