*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, January 25, 2008

எல்லாமும் நீயாய்...


கண்ணாய்... கனவாய்....
சொல்லாய்...சுகமாய்...
வானாய்...வடிவமாய்...
இனிமையாய்...ஏக்கமாய்..
இசையாய்...தமிழாய்...
தென்றலாய்...தீயாய்...
காதலாய்...கவிதையாய்...
குழந்தையாய்...இளமையாய்...
கண்ணணாய்...கணவனாய்...
தாயாய்...தோழனாய்...
பார்க்கின்ற திசையெங்கும்
பசுமையாய்...
சிந்துகின்ற சிரிப்பில் உள்ளம்
வெள்ளையாய்...
அத்தனையும் நீயாய்
காண்கின்ற போதிலும்...
வருடங்கள் ஏழு கடந்தும்...
தூரத்து நிலவாய் ஒளி மட்டும்
தந்து மறைகிறாய்...
ஏனோ?????

ஹேமா (சுவிஸ்)23
.05 2006

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்...

The Dreamer said...

Lovely poem

விச்சு said...

இத்தனையுமா இருந்தவனா!

Post a Comment