*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, July 23, 2014

இரண்டு கவிதைகள்...

நீ...நான்...வெட்கம்

வெட்க ரேகைகளை
மெல்ல மெல்ல
அழித்துக்கொண்டிருக்கிறாய்.

பொய்யாய் வெட்கப்படும்
குறிப்புகள் ஏதும்
எழுதிவைக்காமல்
விட்டது என் பிழை.

கண்ணில்லாதவரின்
ஒற்றைக் கைத்தடியை
என் விரலிடுக்கில்
உதவிக்குச் செருகி
ரேகைகள் புதிதாக
இனி வளராதென்கிறாய்.

வெட்கப்பட்ட ஞாபகங்களை
தட்டித் தடவி
மீட்டெடுக்க நினக்கிறேன்
நீயோ மற்றக் கையிலும்
இன்னொரு
கைத்தடியைச் செருகிறாய்.

இனி நானும்
என் வெட்கங்களும்...!!!



ப்ரியமானவனே...

எதுவும் நினைவிலில்லை
நான்....
உடையத் துவங்கிய கணத்திற்கு
முன்புவரை.....

கொஞ்(ச)சும் முதல்
கொஞ்சிக்கொண்டிருந்தாய்
பின்னராய்
என் முலைகளில்
பாலருந்திக் கொண்டிருந்தாய்...

பேசித்தீரா பிரியங்களை
பெருவெளி மணலிலும்
வானின் எரிநட்சத்திரங்களின்
இருண்ட முனைகளிலும்
புதைத்து வெளியேறும் உன்னை....!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

ஹேமா... இந்த கவிதைகளை நான் எப்படி கவனிக்காமல் விட்டேன். செம... முதல் கவிதை அருமை. இனி நானும்
என் வெட்கங்களும்...!!!

Post a Comment