*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, August 04, 2010

தொடரும் சாபங்கள்...

எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.

மனிதனை மனிதன் நம்பாமல்
வீட்டுக்குக் காவல் நாய்.

கொல்லைவழி போய்
பெரிய வீட்டுக் கோடியில்
பனையேறும்
முருகன் அண்ணா.

காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு
பள்ளி செல்லாச் சிறுமி.

சாதிப்பெயரோடு
தன் பெயரை வைத்துக்கொண்டாலும்
*ஆச்சி* என்றழைக்கும்
என் தாத்தா.

*உன் நல்வாழ்வுக்காகவே
உன்னை விட்டுப் போகிறேன்*
என்று பிரியும் காதல்.

விபச்சாரி வீடு சென்று
கால் அலம்பி
வீடு நுழையும் கணவன்.

ஒவ்வொரு முறையும்
*இனி வந்தால் வேண்டாம்*
என்று நினைத்தாலும்
வந்தவுடன்
முடி கத்தரிக்கத் தொடங்கும் கைகள்.

‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!

ஹேமா(சுவிஸ்