*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, July 22, 2014

கடக்கும் வாழ்வில்...

மழைக்குப்பின்
எறிக்கும் ஊமைவெயிலாய்
சிலரின் வார்த்தைகளை
கழற்றவும் முடியாமல்
எறியவும் முடியாமல்
அவிந்தபடி...
அணிந்துகொண்டு.

மூடும் கதவை
உறுதியாய் நம்பும்
அவிழ்ந்த
நம்பிக்கை உள்ளாடைகளை
ஏமாற்றும்
பிணைப்பின் இருப்பு.

ஓடும் ஆறு இது
பாசி தங்காது.

மனமேந்தும் சொற்கள்
புறக்கணிப்பின் சாடல்களின்
வேகம் தாங்காது
ஆனாலும்
இயல்பாய் ஓடும்
வன்மமின்றி.

உமிழ்ந்துகொண்டேயிருக்கும்
வார்த்தைகளில்
வழுக்கி விழுந்து
எழும்பி நடப்பதுதான்
'இதுவும் கடந்து போகும்'
என்கிற
போகுதலோ?!!!

ஹேமா(சுவிஸ்)

No comments:

Post a Comment