*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, July 22, 2014

எதிர்க்கவிதையொன்று...

தூரத்தில் உன்னைப் பார்த்த போது
புலியின் கண்ணில்
மானைப் பார்த்தேன் அம்மு
பார்வை இன்னும் பார்வையாகவில்லை அங்கே..
உன்னைச் சந்தித்த போது
மானின் வயிற்றில்
ஆழப் புதைந்தது
புலியின் நகம்..
மரணம் இன்னும் வடிவமாக்கப்படவில்லை அங்கே.

மெதுவாய்
உன்னைக் கடக்கிறபோது
இரத்தத்திற்கு விடைகொடுக்கிறது மான்..
நான் உன்னைக் கடந்து முடித்தபோது
மரணம் அங்கே வடிவமாகி இருக்க வேண்டும்.
இப்படித்தான் அம்மு கடக்கிறேன் உன்னை..
..... ..... ..... ....

சத்யா
சென்னை 

Sathya Raj Ph D

ஒரு உயிர்வதை பார்த்தும் கடக்கிறாய் சத்யா
இரத்த வாடை சுவாசிக்கமுடியாமல் நீ...

சூன்யப் பூனைகள் புலிகளாவது பற்றி
முன்னமே அறியத்தரவில்லை எனக்கு நீ...

அவைகளைக் கட்டுப்படுத்தி
மூக்கின் நுனிகளை வளைத்து
என் நிக்கரின் அடிவரை உந்தி
பின் தோல்வியுற்றபோதே
மரணத்திற்கு வடிவமானது
அவைகள்.

அப்போது புலியின் நகக்கீறல்களை
நக்கிக்கொண்டிருந்தது மான்
அதன்பின் தான்
இன்னும் ஆழப்புதைந்தது
புலியின் நகம் மானின் வயிற்றில்.

எனக்குத் தெரியும்
புலியொன்று என் வயிறு கிழிக்கும்
கனவொன்றைக் கண்டு
கடந்துகொண்டிருப்பாய்
சத்யா நீ ..... இப்போதும் !

ஹேமா(சுவிஸ்)

2 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதைக்கு எதிர்கவிதை அருமை அக்கா...

தனிமரம் said...

ஏட்டிக்குப்போட்டியா கவிதைக்கு எதிர்வாதம் அருமை!

Post a Comment