*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, July 03, 2014

கண்டுகொண்டேன்...

கண்டுகொண்டேன்...

மறந்திருப்பாளோவென
என்னையறிய
அப்பப்போ வந்து வட்டமிடுகிறாய்.

என் பாடுகள் வேறானாலும்
வார்த்தைகள்
வலிகள்
மகிழ்ச்சி
மன்றாட்டம்
இசை
கனவு எல்லாவற்றிலுமே
என்னுடன் கலந்து
நீதான் இன்னும்.

நீ...
என்னைத் தொலைத்துவிட
வழி தவற விட்ட
மொழியில்லாக் குழந்தையாய்
உன் ஒற்றை விரல் தேடியபடி.

சுட்டெரித்த உன்னிடம்
நேர்பட
சூரிய விசாரிப்புக்கள்தான்
இல்லாமல் போனது.

மற்றும் படி
சாம்பல் தேசத்தில்
அதே நான் தான்
இன்னும்
உன் பிழை திருத்தங்களோடு!!!

ஹேமா(சுவிஸ்)

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் உள்ள ஆதங்கம் மாற வேண்டும்...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...

logu.. said...

ஹேமா... அட்டகாசம்..!

மாதேவி said...

அருமை வாழ்த்துக்கள்.

Post a Comment