*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, October 04, 2014

குலவை சேமிப்பவன்...

குலவை தொக்கி நிற்கும்
தேயிலை மலைகளெங்கும்
வாத்தியக் குறிப்புக்களை
சேகரித்து
கொண்டு வந்திருந்தான்
நிசப்தத் தொகுப்புக்களாய்.

உள்ளங்கை வெற்றிலையில்
தனக்கான சாத்தியங்களை
சத்தியமாக்குகிறான்.

முன்வினைக் கட்டினை
நீக்கிப் புரள்கிறது இரவு
மூச்சிழுத்து
கண்ணீர் துருத்த.

இனி....
தீரா முத்தங்கள்
கலக்கும் குலவைகளில்
கலக்கக்கூடும்
அவன் சுவாசம்.

அன்று....
ஆறிய தேநீரானாலும்
காத்திருக்கும்
பருகிய இதழோடு.

கணப் பொழுதில்
கனம் அதிகமாகிறது
குரல் பேழையில்
அவனாய் இருக்குமோ!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

No comments:

Post a Comment