*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, October 16, 2014

மோட்சம்...

உரசிப்போனது
கரப்பான் பூச்சியொன்று
நேற்று ராத்திரி.

தோழியின் குழந்தை
முத்தத்தோடு
முகத்தில் பூசிப்போன
பனிக்கூழ் சுவைக்காகவோ

இல்லை...

சர்க்கரை பிசைந்த
கையைத் தேடியோ அல்ல
நிச்சயமாய்.

இறந்து கிடப்பதாயும்
தூங்குவதாயும்
பாசாங்கு காட்டி
ஒளிந்து விளையாடுகிறது
பேணிக்கடியில் சிதறிய
சீனித் துகள்களுக்குள்!!!

பேணி - குவளை

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

1 comment:

msuzhi said...

வித்தியாசமான கவிதை.

Post a Comment