*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, October 02, 2014

மோன இரவொன்று...

'சப்பாத்திக்கள்ளியடி நீ'
என உலர்த்திய
மோனச் சிரிப்பின் விளிம்பில்
தொங்கித் தயாராகிரது
மையலிரவொன்று.

அம்பென
ஊதித் துளைத்து
உயிரை
தூசாய் எண்ணி
கரையும் கண்மையில்
பரபரப்பில்லாமல்
காமரேகை வரைந்து
வசிய இருட்பாயில்
பிரிய வார்த்தைகள்
வலிபடர.

உயிர் உரு(க்)கிய
கணங்களைக் கணக்கிட
ஆணையிட்டு
துயிலாடுகிறது
கவசம் களைந்து
வீரவாள் வீசிய
வெற்றிக்களிப்பில்
ஏதுமறியாததாய்
சொண்டு சுளித்து.

சாட்சியாய்
தகனித்த சுவாசம்
வெட்கி விழித்தபடி
பாவம்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

1 comment:

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை அக்கா...
வாழ்த்துக்கள்.

Post a Comment