*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, May 23, 2014

சுவாமி...


வண்தமிழ் விறலோன்
கொற்றத்து மாறா
புண்கொண்ட மனதோள்
பறைதட்டி வேண்டுவது....

பூந்தண் பொறைப்புகழ் வேண்டா
நண்ணார் வானுரை வேண்டா
விண்கடல் விடர்ச்சிலை வேண்டா
வெண்குடை சாமரம் வேண்டா

உண்ணத் தமிழ் தா
பண்ணொடு பாக்கள் தா
கொண்ட நன்கல உலகு தா
நாண்டு சாவும் நேர்மை தா
கண்புகும் ரௌத்திரம் தா
விண்ணேகும் வரமும் தா

நீலமேனி வாலிழை பாகத்து
பனிமுல்லை மலரோனே
அருள் தா எனக்கு
நின் நிழற்கீழ் திருவடி நீழலில்
இருதாள் அமர!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

அப்பாதுரை said...

யாரங்கே.. ஹேமாவுக்கு ஒரு லிடர் அருள் பார்சல்..

ஹேமா said...

ஹாஹாஹா.... அப்பாஜி.... நானே ஒரு சவாலுக்காக கஸ்டப்படு முதல்முறையா எழுதினது..... கலாய்க்காதேங்கோ :)

தனிமரம் said...

வேண்டும் வரத்தை முருகன் தரட்டும்!

Unknown said...

அட...................இறவன் தாள் பணிந்து...முதல் பா....வெண்பா....அருட்பா........இன்னுமென்ன பா?

Post a Comment